சம்பள தேதி ஒன்னிலே…

மே 10, 2008 at 3:28 பிற்பகல் (நகைச்சுவை) (, , )

புருஷன் பொண்டாட்டிக்குள்ள இதெல்லாம் சகஜமப்பா….

மனைவி: மார்கெட்ல புதுசா ஒரு ஐ-பாடு வந்திருக்கு. எனக்கு அது வேனும். ஒழுங்கா உன் சம்பளத்த குடுத்துட்டு அடுத்த வேலைய பாரு

கணவன்: ஒரு ஐ-பாடுக்கு இப்டி நாயா அலையிறியேடி, இந்த சம்பளத்துக்கு நான் பட்ட ”பாடு” தெரியுமாடி உனக்கு

மனைவி: மாடு மாதிரி உழைக்கதான் உன்னை புருஷனா வைச்சிருக்கேன். மொதல்ல உன் பர்ஸ் எங்கேன்னு சொல்லு

கணவன்: தரமாட்டேன், தரமாட்டேன், தரமாட்டேன்… கைய எடுடீ…

கணவன்: என்ன உடூ…. இதெல்லாம் ரொம்ப ஓவரு. பர்ச எடுக்காத ப்ளீஸ்…

மனைவி: பிச்சிருவேன், பணத்த குடுக்காம இருந்துடுவியா இந்த வீட்ல… பட்டா, சாவடிச்சிருவேன்…

மனைவி: என் சமத்து புருஷா, இப்போ நான் கடைக்கு போயிட்டு, எனக்கு ஐ-பாடும் உனக்கு குச்சிமிட்டாயும் வாங்கிட்டு வருவேனாம். வழிவிடுறா செல்லம்…

மனைவி: உம்ம்ம்ம்ம்ம்ம்மா, எம் புருஷன்னா புருஷந்தான்…

கணவன்: ஏன்டி சொல்ல மாட்டே, அதான் முழு சம்பளத்தயும் புடுங்கிட்டியே, இதுவும் சொல்லுவ இன்னுமும் சொல்லுவ… போடீ…

5 மறுமொழிகள்

  1. jaisankarj சொன்னது,

    மே 13, 2008 இல் 8:47 பிற்பகல்

    உன் comment படத்தை விட super . தலைவா எங்கியோ போயிட்ட

  2. Laxman சொன்னது,

    மே 14, 2008 இல் 1:40 பிற்பகல்

    உங்கள் வாடிக்கையை வேடிக்கையாக சொல்லியுள்ளீர்கள்…நன்று…

  3. vijaygopalswami சொன்னது,

    மே 14, 2008 இல் 6:12 பிற்பகல்

    வருகைக்கு நன்றி ஜெய்சங்கர், லக்‌ஷ்மன்.

    //
    உங்கள் வாடிக்கையை வேடிக்கையாக சொல்லியுள்ளீர்கள்…நன்று…
    //

    எதிர்காலத்தில், திருமணத்திற்கு பிறகு வேண்டுமானால் இது வாடிக்கையாகலாம். குடும்பஸ்தர்கள் பலரும் இதை அனுபவித்து வருவதாக ”உக்காந்து கவலைப் படுவோர் சங்கம்” (அதுதான்பா, கல்யாணமான குரூப்பு) கவலையுடன் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

  4. விக்னேஷ்வரன் அடைக்கலம் சொன்னது,

    மே 17, 2008 இல் 1:56 பிற்பகல்

    அண்ணாச்சி பட்த்தை ஏற்கணவே மின்னஞ்சலில் பார்த்திருகேன்… டயலாக் சூப்பரா இருக்கு…

  5. சேவியர் சொன்னது,

    மே 19, 2008 இல் 6:20 பிற்பகல்

    அசத்தல் கமெண்ட்ஸ் :) ரொம்பவே ரசித்தேன்.

மறுமொழியொன்றை வழங்குக