கலை “மாமா”மணி விருதுகள் அறிவிப்பு
9:33 முப இல் பிப்ரவரி 28, 2009 | படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: அசின், அபிராமி, ஐஷ்வர்யா, சரோஜா தேவி, நயன், மீரா ஜாஸ்மின்
கலைமாமணி விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெகு சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாம் அறியாத பல முகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், அறிமுகமே தேவையில்லாத சில முகங்களும் அவற்றுள் அடக்கம். அவர்களைப்பற்றிய பதிவுதான் இது.
இவருதான் அபிராமி ராமநாதன். அபிராமி மெகா மால்னு ஒரு தியேட்டர் வச்சிருக்காரு. சிவாஜி படத்தோட சென்னை மாநகர, மாவட்ட ஏகபோக உரிமையையும் வாங்கி வச்சிருக்காரு. சமீபத்துல “பஞ்சாமிருதம்” அப்படீன்னு ஒரு படமும் எடுத்து உட்டாருங்க. அதனால தியேட்டர் ஓனரா இருந்தவரு தயாரிப்பாளரா ஆகிட்டாரு. கலைச்சேவை எல்லாத்துலயும் உன்னதமான கலைச் சேவை, இவரு செய்யுறதுதான். ஆட்சியில யாரு இருந்தாலும், திரையுலகத்தோட பொன்னான காலம் உங்க ஆட்சிக்காலந்தான்னு அறிக்கை விடுவார். திரையுலகம், கலைஞருக்கு பவளவிழா எடுத்தப்போவும் இதையேதான் சொன்னாரு, அம்மாவுக்குப் பாராட்டு விழா நடத்துனப்பயும் இதையேதான் சொன்னாரு. இவரப் பொறுத்த வரைக்கும் அன்னைக்கு ஒரு பேச்சு, இன்னைக்கு ஒரு பேச்சுன்னு இருக்க மட்டாரு. தட்டுற தாளத்த தப்பாம தட்டுவாரு. எனக்கு என்ன வருத்தம்னா திரைப்படத் தயாரிப்பாளரா இவருக்கு விருது குடுத்ததுதான். தவில் கலைஞர், நடனக் கலைஞர் மாதிரி தாளக் கலைஞர் அப்படீன்னு ஒரு பிரிவுல குடுத்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன். நாம நெனைக்கிறதெல்லாம் நடந்துடுதா என்ன? சரி… விடுங்க பாஸ்.
சிறந்த பரதநாட்டியக் கலைஞரான ஐஷ்வர்யா தனுஷுக்கும் கலைமாமணி விருது குடுத்திருக்காங்க. இவுங்களுக்கு பரதநாட்டியம் ஆடத் தெரியும்ங்கறது இப்ப, கலைமாமணி விருது அறிவிச்ச பெறகுதான் தெரியும். ஒருவேளை ஆஷ்ரம் இஸ்கூலுக்குள்ளாறயே ஆடிருப்பாங்களோ என்னமோ! அங்க என்ன நடக்குது ஏது நடக்குதுன்னுதான் வெளிய யாருக்குமே தெரியாதே. ஒன்னு கேக்குறேன், யாரும் தப்பா நெனைக்கக் கூடாது. ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில ஜட்ஜா இருந்ததுக்கு தான் இந்த விருதக் குடுக்குறோம்னு வெளிப்படையா சொன்னா நாங்க என்ன வேணாம்னா சொல்லப் போறோம்?
இந்த வருஷமும் விருது கிடைக்கலைன்னா “கடிச்ச சிம்புவுக்குத்தான் விருதா? கடி வாங்குன எனக்கு இல்லையான்னு?” இந்தப் புள்ள குங்குமத்துக்கு பேட்டி குடுத்தாலும் குடுத்திருக்கும். “சரக்கடிக்கலாமா…” அப்படீன்னு வில்லு படத்துல கேப்பாங்களே, அந்தப் போர்க்குணத்துக்கே தரலாம்யா பத்து கலைமாமணி. அன்புமணி ராமதாச மருந்துக்குக் கூட மதிக்கலியே… (அந்த ஒதடு கடி படத்த ஏன் போடலேன்னு கேக்கலாம்? படிக்கிறவுங்க கவனச் சிதறலுக்கு எடங்குடுத்துறக் கூடாது பாருங்க… அதுக்குத்தான் அந்தப் படத்தப் போடல. மகா ஜனங்களே இதுக்கு வேற எந்த உள்நோக்கமும் கிடையாது).
“அன்பு மகள் அசினுக்கு என் இதயத்திலே எப்போதும் இடம் உண்டு. அசினை பல வருடங்களாகப் படங்களிலும் விளம்பரங்களிலும் பார்த்து வருகிறேன். அது ஃபேர் அண்டு லவ்லி விளம்பரமானாலும் சரி, ஃபேண்ட்டா விளம்பரமானாலும் சரி, அவருடைய நடிப்பிலே ஒரு நேர்த்தி இருப்பதை நான் அறிவேன் என்பதை நீ அறிவாய் என்பதையும் நான் அறிவேன். குறிப்பாக ஹயக்கிரிவா சில்க்ஸ் விளம்பரத்திலே…” இப்படித் தொடங்குற ஒரு கடிதம் முரசொலியில வற்றதுக்கு முன்னாடி நல்ல வேளையா அசினுக்கு விருதக் குடுத்தாங்க.
விருதுக் குழுவுல இருந்த புண்ணியவான் யாரோ ஒருத்தர் மீரா ஜாஸ்மினுக்கும் துண்டப் போட்டு எடம் புடிச்சு வச்சிருக்காரு. “நேபாளி” ங்கற படத்துல பரத்துக்கு அக்கா மாதிரி இருந்தாலும் ஜோடியா நடிச்சுது மீரா. இந்தப்புள்ள ரன் படத்துல மாதவன் கையப் புடிச்சிக்கிட்டு ஓடுச்சு, “சண்டைக் கோழி” படத்துல விஷால் கையப் புடிச்சிக்கிட்டு ஓடுச்சு. நடிக்கிற ஒவ்வொரு படத்துலயும் இந்தப் புள்ளதான் ஓடுச்சே தவிற படம் ஓடுச்சான்னு தெரியல. இந்தப் புள்ளைக்கு நல்லா ட்ரெயினிங் குடுத்து ஒலிம்பிக்குக்கு அனுப்புனா ரெண்டு மூணு தங்கப்பதக்கம் கேரண்டியா கெடைக்கும்.
ஆரம்பத்துல மூணு நாலு ஹீரோக்கள் கூட நடிச்சிருந்தாலும் தொடர்ந்து சிங்கிள் ஹீரோவா நடிக்கிற அளவுக்கு முன்னேறிருக்காரு, வாழ்த்துக்கள். இவருக்கு ஏன் விருது குடுத்திருப்பாங்கன்னு யோசிக்கும் போது ஒரே ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்துச்சு. “பழநி”! முருகன் கோமணத்தோட நின்ன பழனி இல்லீங்க, பேரரசு இயக்கத்துல வந்த “பழனி” திரைக்காவியம். அதுல ஒரு வசனம் சொல்லுவாரு பாருங்க “டேய், இனிமேலும் எங்க ஐயா கிட்ட வச்சுக்கிட்டே, நீ சோத்துல வைக்கிறதுக்கு சோத்தாங்கையும் இருக்காது, ***ல வைக்கிறதுக்கு பீச்சாங்கையும் இருக்காது” ன்னு, அந்த ஒரு வசனத்துக்காகவே குடுக்கலாம் கலை மாமணி விருது. (நியாயமா இந்த விருது பேரரசுவுக்குப் போக வேண்டியது, ஜஸ்ட் மிஸ்).
ரஜினிகாந்து குடும்பத்துல ஒருத்தருக்கு விருது குடுத்துட்டு கமலஹாசன் குடும்பத்து ஆளுகளுக்குக் குடுக்கலைன்னா என்ன ஆகறது. தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்கு கெட்டுடும்ல… ஆட்சிய கலைச்சிருவாங்கள்ள… அதனால அனுஹாசனுக்கும் ஒரு விருது. இவுங்களும் விஜய் டிவியோட கௌரவத் தொகுப்பாளினி. “காஃபி வித் அனு” நிகழ்ச்சியையும் வேற சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குறாங்க. தொழிலதிபரும் கூட.
கடைசியா ஒரு விஷயம், இவங்க எல்லாரோடயும் சேந்து “கன்னடத்துப் பைங்கிளி” சரோஜாதேவி அம்மாவும் கலை மாமணி விருது வாங்குறாங்க. பரத், நயன்தாரா, ஐஷ்வர்யா தனுஷ், அசின், மீரா ஜாஸ்மின் இவுங்களுக்கெல்லாம் முப்பது வயசாகறதுக்கு முன்னாலயே விருது குடுக்கற தமிழக அரசுக்கு சரோஜாதேவிய வயசு போன காலத்துல இப்பதான் கண்ணுக்குத் தெரியுது. அடக் கெரகமே… எம்.ஜி.ஆருக்கே ஜோடியா நடிச்சவங்களுக்கு இப்படி ஒரு பரிதாப நெலமையா!
இதச் சொல்றதுக்கு எதுக்குடா இப்படி ஒரு தலைப்பு வச்சேன்னு யாரும் கேக்கக் கூடாது. தோணுச்சு வச்சேன், அவ்வளவுதான். இவுங்களுக்கெல்லாம் ஏன் விருது குடுத்தோம்னு விருது கமிட்டிக்காரங்களால சொல்ல முடியுமா? அது மாதிரிதான்.
3 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
Kandippa idhu Kalai”mama”mani awardu thaan. Idhukku mama velai paathathu thaan yaarunu theriyala.
Comment by Chezhian— பிப்ரவரி 28, 2009 #
இதெல்லாம் ஒரு விருது.. அதுக்கெல்லாம் பதிவு.. டைம் வேஸ்ட்..
Comment by கேபிள் சங்கர்— பிப்ரவரி 28, 2009 #
Vanakkam.
Entha Kalaimamani Award selection pannurathu ennomo peruthan iyal isai mantram. Appadi ellam unnum Sun & Kalaigar Cos selection committte.
KALAIMAMANI = KALAIGAR + MAMA + MONEY
Selecct seithu ulla ellarum ethavathu oru valiyil Sun Groups & Kalaigar Groups thevaipada poravanga or eppo commit aki work parthu kittu irukkum nabarkal than.
1. Nayantha – Udathaya nithikku oru padam
2. Saroja devei – Same flim
3. Sundar C – Sun pictures oru padam + Kushbu Manada & Mayilada..
Ponga sollikitte pogalam.
Varattuma…
Comment by Padmanaban Rathinam— பிப்ரவரி 28, 2009 #