இரண்டு கைகள் நான்கானால்…
6:08 பிப இல் மார்ச் 2, 2009 | கருத்துப் படம் இல் பதிவிடப்பட்டது | 2 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: எழுத்து மாமா, கருணாநிதி, கொளத்தூர் மணி, சீமான், ஜெயலலிதா, ஞாநி, வைகோ
நல்லா பாத்துக்குங்கப்பா, தட்டு ரெண்டும் நேரா இருக்கு, நேரா இருக்கு, நேரா இருக்கு…
ஓ பக்கங்களில் எழுத்து மாமா கேட்ட இந்த வாரக் கேள்வி:
பெரியார் திராவிடர் கழகத்தலைவரும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளருமான கொளத்தூர் மணி ‘‘ ராஜீவ் காந்தி கொலை செய்யப்படவில்லை. அவருக்குத் தரப்ட்டது மரன தண்டனை. உண்மையில் நாட்டுப்பற்று உள்ள இந்தியன், சமூக நீதி கோரும் பிற்படுத்தப்பட்டவன் எவனாவது ராஜீவ் காந்திக்கு மரண தண்டனை கொடுத்திருக்க வேன்டும். நாம் செய்யத்தவறியதை ஈழத்தமிழன் ஒருவன் செய்தபோது நாம் உண்மையில் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். ஏனென்றால் 6000 பேரைக் கொன்ற, 1000 பெண்களை பாலியல் வல்லாங்கு செய்த இந்திய அமைதிப்படையை ஈழத்துகு அனுப்பியவன் ராஜீவ் காந்தி. துடிக்காதா நெஞ்சம் ? ஒரு ஈழத்தமிழன் செய்திருந்தால் அது நியாயம். விடுதலைப்புலிகள் செய்திருக்காவிட்டால் அது குற்றம் செய்து இருந்தால் பாராட்டுகிறோம். இல்லையென்றால் கண்டிக்கிறோம் என்று நாம் பேசியிருக்க வேண்டும்’’ என்று பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார்.
ராஜீவ் செய்த ‘குற்ற’த்துக்காக விடுதலைப் புலிகள் மரண தண்டனை வழங்கலாம் என்றால், அந்த ‘குற்ற’த்துக்கு தொடர்பே இல்லாத இன்னும் இருபது பேரையும் ஸ்ரீபெரும்புதூரில் கொன்றதற்காக விடுதலைப்புலிகளுக்கு மரண தண்டனை வழங்கலாமா? அந்த ‘அப்பாவிகள்’ தற்செயலாக செத்தது தவிர்க்க முடியாதது என்று சொல்வீர்களா? புலிகளுக்கும் ராஜபக்ஷே அரசுக்கும் நடக்கும் போரில் இடையில் சில அப்பாவித் தமிழர்கள் சாவது தவிர்க்கமுடியாதது என்று ஜெயலலிதா சொன்னதைப் போன்றதுதானே அது ?
குற்றத்துக்கு மரண தண்டனை வழங்குவது சரியென்றால் இந்திய சட்டபடி குற்றவாளிகளான ராஜீவ் கொலையாளிகளுக்கு விதித்த மரண தண்டனைக்கு எதிராக ஏன் கையெழுத்து இயக்கம் நடத்தினீர்கள் ? ஏன் கருணை மனுக்களை ஆதரிக்கிறீர்கள் ? சில மரண தண்டனைகள் மட்டும் அநியாயமானவை; மற்றவை இருக்கலாம் என்பதுதான் மனித நேயக் கையெழுத்து இயக்கமா?
அதிசயம் ஆனால் உண்மை, ஓ பக்கங்களில் முதல் முறையாக, கருந்தேள், நெருஞ்சி முள், நச்சுப் பாம்பு முதலியவை பதுக்கி வைக்கப்படாத பூச்செண்டை முதல்வர் கருணாநிதிக்கு வழங்கவிருக்கிறார் எழுத்து மாமா. ஏனெனில் எழுத்து மாமா போட்டுக் கொடுத்ததற்கினங்க “பெரியார் திராவிடர் கழக” தலைவர் கொளத்தூர் மணியைக் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர்!!!
2 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
தொடர்புடைய பதிவு: கொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா? – வே. மதிமாறன்
Comment by vijaygopalswami— மார்ச் 2, 2009 #
[…] இரண்டு கைகள் நான்கானால்… […]
Pingback by காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு - இறுதிப் பாகம் « விஜய்கோபால்சாமி— மார்ச் 5, 2009 #