மக்களே, தமிழக மக்களே
11:35 முப இல் ஏப்ரல் 10, 2009 | அங்கதம், அரசியல் இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: தேர்தல், நான் அரசியல்வாதி, பாடல், பிச்சைப் பாத்திரம்
காங்கிரஸ் கட்சி “ஜெய் ஹோ” பாடலை தங்களது பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தி வருகிறது. சளைக்காமல் பா.ஜ.க.வும் தங்களுக்கென்று சொந்தமாக ஒரு பிரச்சாரப் பாடலை உருவாக்கியுள்ளது. இவர்களில் ஒருவரை பாராளுமன்றத்துக்கு அனுப்பவிருக்கும் மக்களுக்காக எந்த பாடலும் இல்லை. அந்த வேதைனையின் விளைவாய் உருவானதே இப்பாடல். அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும் பாடல். ரீமிக்ஸ் எழுதியும் வெகுநாளாகிவிட்டதால், ரீமிக்ஸ் எழுதவும் என்ற நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கி இப்பாடலை எழுதியுள்ளேன். எனக்கு இசையமைத்துத் தந்த இசைஞானிக்கு (?!) இந்த நேரத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!! இனி தொடர்வது பாடல்…
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே தமிழக மக்களே – நாங்கள்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே தமிழக மக்களே…
தேர்தலென்னும் செலவோடு செல்வாக்கும்
வசதியும் இணைத்தொரு பதவி தரும்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே தமிழக மக்களே (2)
ஐந்தே ஆண்டுகளில் வந்ததே… – தேர்தல்
ஆணையம் தலைவலி தந்ததே… (2)
உண்மையை நீரறியாததால்… (2)
சிறுபொம்மையாய் உமையெண்ணி
உம்மிடம் உம்மிடம்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே தமிழக மக்களே (2)
அத்தனை கட்சியும் கூட்டணியில் – எனக்
கெத்தனை தொகுதிகள் தமிழகத்தில்… (2)
வெறும் நோட்டுகள் உள்ளது என்னிடத்தில்
வேண்டிய ஓட்டுகளோ அது உம்மிடத்தில்
ஒருமுறையா இருமுறையா
ஐந்தாண்டுக்கு ஒருமுறை
அலையவிட்டாய்
பணம் கொடுத்தேன்
பொருள் கொடுத்தேன்
பதவியில் எனைக் கொண்டு
அமரவைத்தாய்
செலவுக்குக் கணக்கு கேட்டு
தேர்தலாணையமும் துரத்துதே
தேர்தல் நிதி நிதி நிதி என்று
வசூலுக்கு சென்று மனம் சலித்ததே
கரண்சிகளை நீட்டுவோம் – ஓட்டு
எங்களுக்கே போடுவீர்
உம் திருக்கரம் எங்கள் சின்னம்
தொடுவதில் எதிர்காலம்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே தமிழக மக்களே
தேர்தலென்னும் செலவோடு செல்வாக்கும்
வசதியும் இணைத்தொரு பதவி தரும்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே தமிழக மக்களே
சவுண்ட் மிக்சிங்கில் நல்ல ஞானமுள்ளவர்கள் யாராவது இப்பாடலை இசையுடன் இணைத்துத் தந்தால் மிக்க மகிழ்ச்சி. அவ்வாறு செய்தால் எனக்கும் ஒரு காப்பி அனுப்பி வைக்கவும். இந்தப் பதிவைப் படித்துவிட்டு ஓட்டளிக்க மறந்துவிடாதீர். 🙂 ஹி ஹி எல்லாம் ஒரு வெளம்பரந்தான்…
4 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
http://www.writermugil.com/?p=435
Comment by Aswin— ஏப்ரல் 10, 2009 #
:)) நீங்க பெரிய கவிஞ்ராக வருவிங்க சித்தப்பு….
Comment by VIKNESHWARAN— ஏப்ரல் 10, 2009 #
ஞாநியே இந்தப் பாட்டு வரிகளை பயன்படுத்திட்டாரே நாம பயன்படுத்துனா என்னன்னு நெனச்சி எழுதினது தான் இந்த ரீமிக்ஸ். மேலும் பல மாத காலமாக நான் ரீமிக்ஸ் எழுதி வருகிறேன். மற்றபடி முகில் எழுதிய பாடல் குறித்து தெரியாது.
Comment by vijaygopalswami— ஏப்ரல் 10, 2009 #
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
Comment by ulavu.com— ஏப்ரல் 10, 2009 #