அன்புள்ள ராமகோபாலன் அல்லது படுக்கை எண் 9, ம.ந. காப்பகம், கீழ்ப்பாக்கம் அல்லது அடச் சீ வாய மூடு
10:00 முப இல் நவம்பர் 30, 2008 | அரசியல், நகைச்சுவை, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: கருத்து சுதந்திரம், பாரதிராஜா, புதுச்சேரி, ராமகோபாலன், ராமர் பாலம்
புதுச்சேரியில் பாரதிராஜா உள்ளிட்ட இயக்குனர்கள் பிரிவினையை தூண்டும் பேச்சுக்களை பேசி இருப்பதற்கு, இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் அறிக்கை: புதுச்சேரியில், “ஈழத்தமிழர் இன்னல் நீங்க போர் நிறுத்தம் ஒன்றே தீர்வு” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சினிமா இயக்குனர்கள் பாரதிராஜா, செல்வமணி, சேகர் ஆகியோர், பிரிவினையைத் தூண்டும் பேச்சுக்கள் பேசி இருப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
“தமிழகம் பாகுபட்டு விடும், தமிழில் தேசிய கீதம் பாடக்கூடிய நேரம் விரைவில் வரும்’ என்று பேசிய பேச்சு, சவால் விடும் வகையில் அமைந்துள்ளது. ஞானசேகரன், சுதர்சனம் உள்ளிட்ட பிரிவினைவாத எதிர்ப்பு காங்கிரஸ் தலைவர்கள், இயக்குனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி புதுச்சேரி அரசை வற்புறுத்த வேண்டும். இலங்கைத் தமிழர்கள் முப்பது ஆண்டுகளாக போராடி வருகின்றனர் எனக் கூறும் இவர்கள், முப்பது ஆண்டுகள் தமிழகத்தில் சினிமா தானே எடுத்துக் கொண்டிருந்தனர். சினிமாவில் மார்க்கெட் சரிந்து, முகவரி இல்லாமல் போய்விட்ட இவர்கள், புலி ஆதரவு முகமூடி அணிந்து, பிரபாகரனுக்கு வக்காலத்து வாங்கி, அவரை தலைவராக சித்தரிப்பது கேவலத்திலும், கேவலம். தமிழகம் பிரிவினையை ஏற்றுக்கொள்ளாது.கருத்து சுதந்திரம், பேச்சுரிமை என்றெல்லாம் உதாரணம் காட்டி எது வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை நாளை நாட்டிற்கு பெரும் தலைவலியாக அமைந்து விடும்.
அந்த கருத்தரங்கில் பேசப்பட்ட பேச்சுக்களை உளவுத்துறை மத்திய அரசுக்கு தெரிவித்து இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.காஷ்மீர், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம் போன்ற மாநிலங்களில் தனி நாடு கோரிக்கை வைத்து பேசியபோது, நடவடிக்கை எடுக்கத் தவறிய காரணத்தால் இன்று அங்கு பிரிவினைவாதம் பேயாட்டம் ஆடுகிறது. எனவே, மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தமிழர்கள் படும் துயங்களுக்கு குரல் கொடுக்காமல், இந்த சினிமாக்காரர்கள், இலங்கை பிரபாகரனுக்கு துதி பாடுவதற்கு காரணம், இனப்பற்றா, இல்லை பணப்பற்றா?பாரதிராஜா, செல்வமணி, வி.சேகர் போன்ற கடல் கடந்த தேசபக்தர்கள், இலங்கையில் சென்று போராடினால் பொருத்தமாக இருக்கும்.இவ்வாறு ராம.கோபாலன் கூறியுள்ளார்.
நன்றி: தின மல(ம்)ர்
யோவ் ராமகோ, ராமர் பாலத்தை இடிக்கக் கூடாதுன்னு ஏன்யா ஊருக்குள்ள இருந்துக்கிட்டு போராட்டம் பண்றே. போய் கடலுக்குள்ள ராமர் பாலத்துலயே நின்னுகிட்டுப் போராட வேண்டியது தானே.
தலைப்பை இப்போது ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள்.
டிஸ்கி: ராமகோபாலனை மனநலம் பாதிக்கப்பட்டோருடன் ஒப்பிட்டமைக்காக ராமகோபாலன் கோபப் படலாம். அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. மனநலம் பாதிக்கப்பட்டோர் கோபப்பட்டால் என்ன செய்வது என்று யோசித்தபோது முன்கூட்டியே பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வது நல்லது என்று தோன்றியதால் இப்போதே கேட்டு வைக்கிறேன், “பகிரங்க மன்னிப்பு”.
காதலில் விழுந்தேன்…
10:18 பிப இல் செப்ரெம்பர் 29, 2008 | அரசியல், நகைச்சுவை, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: காதலில் விழுந்தேன், சன் டிவி, நேற்று முளைத்த தலைவ
காதலில் விழுந்தேன் படத்தை மதுரையில் வெளியிட முடியாமல் இருப்பதற்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கடும்(!) கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். மக்களின் அதி அத்தியாவசியத் தேவையான ”காதலில் விழுந்தேன்” படத்தைத் தடுப்பது எந்த வகையில் நியாயம் என்று நேற்று முளைத்த தலைவர்கள் முதல் கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரை சன் டிவியில் ஒப்பாரி வைத்தாகிவிட்டது.
இதே போன்ற சிக்கலில் ”ஆவணித் திங்கள்”, “காற்றுக்கென்ன வேலி” உள்ளிட்ட திரைப்படங்களும் பாதிக்கப்பட்ட போது எங்கே போனார்கள் இந்தத் தலைவர்கள். அப்படியே இவர்கள் கண்டித்திருந்தாலும் அதையெல்லாம் நடுநிலையோடு ஒளிபரப்பியதா இந்த சன் டிவி?
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், என். வரதராஜன், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட தலைவர்களின் உயிர் போகும் பிரச்சனையாக காதலில் விழுந்தேன் பட விவகாரம் உருவெடுத்திருக்கிறது. ”சோற்றுக்கு சிங்கியடிக்கும் சன் பிக்சர்சுக்கு” உதவ விரும்பினால் இவர்களேல்லாம் தங்களது கட்சித் தொன்டர்களுக்கு இத்திரைப்படத்தின் டிக்கெட்டுகளை (காசு கொடுத்து) வாங்கி விநியோகிக்கலாம்.
மதுரையில் ஏற்பட்ட நஷ்டத்தைத் தமிழ்நாடு முழுவதும் படத்தை வெற்றிகரமாக ஓடவைத்து ஈடுகட்ட இவர்களேல்லாம் சன் பிக்சர்சுக்கு உதவினால் ஒரு வேளை ப்ரைம் டைமில் இவர்களுக்கு நிகழ்ச்சி நடத்த ஸ்லாட் கிடைத்தாலும் கிடைக்கலாம் (சன் குழுமத்தின் குழந்தைகளுக்கான சேனலான சுட்டி டிவியில் கொடுப்பார்கள்… அய்யய்யோ அப்போ ஜாக்கிசான் அட்வென்ச்சர்ஸ் பாக்க முடியாதா? அழகிரி அங்கிள் இவுங்கள கொஞ்சம் என்னன்னு கேளுங்களேன்…).
இந்தத் தலைவர்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் சன் பிக்சர்சுக்கு இருக்கவே இருக்கிறது “இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக….”
சமீபத்தில் எனக்கு வந்த ஆர்குட் ஸ்கிராப் இது. படத்தின் மேல் அழுத்திப் பெரியதாகப் பாருங்கள். 🙂
திமுக எப்படி இன்னும் காங்கிரஸ் கூட்டணியில்?
8:11 பிப இல் ஓகஸ்ட் 6, 2008 | அரசியல், நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: அரசியல், திமுக, பிருந்தா காரத், மார்க்சிஸ்டுகள்
சேது சமுத்திரத் திட்டத்தை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் காங்கிரசுடன் திமுக எப்படிக் கூட்டணியில் இருக்கலாம்?
பிருந்தா காரத் கேள்வி (சன் செய்திகள்)
ஏனம்மா உங்களுக்கு இந்த வேண்டாத வேலை? நீங்கள் இதைக் கிளறினால் காங்கிரஸ்காரர்கள் நீங்கள் (மேற்குவங்க மார்க்சிஸ்டுகள்) தமிழகத்துக்கு வரவிருந்த கடல்சார் பல்கலைக்கழகத்தைத் தடுத்தீர்களே, அதைக் கிளறுவார்கள். தேவையா இதெல்லாம்?
எனக்கு மட்டும் ஏன் இப்படி? – III
2:32 முப இல் ஜூலை 19, 2008 | நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 8 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: தலப்பாக்கட்டு, நாகி ரெட்டி, பிரியாணி, ஹைதராபாத்
சில நேரத்துல ஏந்தான் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குதுன்னு என்னை நெனச்சு நானே வருத்தப்படுறதுண்டு. காலம் பின்னாடி ஒனக்கு வட்டியும் மொதலுமா சேத்து வச்சுத் தரும்டான்னு என்னை நானே சமாதானம் பண்ணிக்குவேன். சனியனே, எதுக்குடா இந்த பில்டப்புன்னு குறுக்க புகுந்து லந்தக் குடுத்தா என்னோட ப்ளோ தடைபட்டுரும். அதுனால நான் சொல்லப் போற சமாச்சாரத்த எல்லாரு அமைதியா கேட்டுக்கனும், சொல்லிட்டேன்.
போன வாரம் நான் குடியிருக்கற வீட்டுச் சொந்தக்காரர் நாகி ரெட்டியோட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்தேன். நாகி ரெட்டின்னா வாஹினி ஸ்டுடியோ ஓனரு கெடையாதுங்க, இவரு ராணுவத்துல மேஜரா இருந்து ரிட்டையரானவரு. இப்போ வீட்டுல மைனரா இருந்து லந்தக் குடுத்துக்கிட்டு இருக்காரான்னு எதிர்க் கேள்வி கேக்கப்படாது. அப்புறம் நான் சொல்ல வந்தத மறந்துடுவேன்.
நாங்க ரெண்டுபேரும் பேசிக்கிட்டிருந்தோமா, அப்போ அவங்க வீட்டம்மா அந்தப் பக்கமா போகவும் வரவுமா இருந்தாங்க. போயிட்டு வற்றேங்கன்னு சொல்லிட்டு நான் கெளம்பும் போது “இன்னிக்கு வெளிய எங்கயும் சாப்பிட வேண்டாம். உனக்கு நானே சாப்பாடு குடுத்துவுடுறேன்னு” சொல்லி அனுப்புனாங்க.
நானும் மதியம் 12:30 லேந்து இப்போ வரும் அப்புறம் வரும்னு காத்துக்கிட்டிருந்தேங்க. ஞாயித்துக் கெளமையாச்சா, ஆடு கோழி எதாச்சுமா இருக்கும்னு ரொம்ப ஆவலாக் காத்திருந்தேன். இப்பவும் சொல்றேன், நானாக்கூட கேக்கலிங்க, அவங்களாத் தான் குடுத்துவுடுறேன்னு சொன்னாங்க. இதை ஏன் சொல்றேன்னா பிற்காலத்துல என்னைப் பாத்து ஓசிச் சோத்துக்கு அலையிறவன்னு யாரும் தப்பா நெனச்சிறக் கூடாது பாருங்க. நமக்கு வரலாறு ரொம்ப முக்கியங்க, அதுக்காகத் தான் சொன்னேன்.
அப்படி இப்படின்னு மணி 3:30 ஆயிருச்சுங்க. ஆனா பாருங்க சாப்பாடு வந்து சேரலை. என்ன தான் நேர்ல போய்க் கேக்கத் தயக்கமா இருந்தாலும் அவங்க வீட்டு முன்னால குறுக்கயும் மறுக்கயும் போனா நம்மளப் பாத்த பெறகாவது ஞாபகம் வந்து குடுத்துவுடுவாங்கன்னு நெனச்சு கதவத் தொறந்துக்கிட்டு வெளிய வந்தேங்க. அவங்க வீட்டு வாசல்லயே ஒரு ”பகீர்” காத்திருந்துச்சு எனக்கு. அறுவது ரூவாய்க்கு மூணு சாவியோட தருவாங்க பாருங்க சைனா பூட்டு, அவங்க வீட்டுக் கதவுல அது பூட்டுன மானிக்கு தொங்குது.
மணி நாலாகப் போவுது, அந்த நேரத்துக்கு ”ஹைதராபாத் ஹவுஸ்” கூடத் தெறந்திருக்காது. ஹைதராபாத் ஹவுஸ்னா அது ஹைதராபாத் நிஜாமோட வீடான்னு நீங்கள்ளாம் ஏடா கூடமா கேக்கறதுக்கு முன்னாடி நானே சொல்லிடுறேன். ஹைதராபாத் ஹவுஸ்ங்கறது நம்ம ஊரு தலப்பாக்கட்டு பிரியாணிக் கடை மாதிரி ஒரு அசைவ ஓட்டலுங்க. அங்க கெடைக்கிற பிரியாணி கொஞ்சம் ஸ்பெஷல். 90 ரூபாய்க்கு வாங்குற சிக்கன் பிரியாணிய ரெண்டு வேளைக்கு சாப்பிடலாம். அவ்வளவு நெறைய இருக்கும். (சமீபத்திய பணவீக்கத்துல அந்த பார்சல் பிரியாணியோட வீக்கம் கொறஞ்சுருச்சுங்க. அதாவது அளவக் கொறைச்சுட்டாங்கன்னு சொல்றேன்.) மணி நாலாயிட்டதால அங்கயும் போக முடியலை.
மனசு நொந்து போய் வீட்டுக்குத் திரும்பி வந்துட்டேன். திருவிளையாடல் (தனுஷ் படம் கெடையாதுங்க, பழைய படம்) படத்துல பாணபத்திரர் சிவலிங்கத்து முன்னால விழுந்து கெடப்பாரே, பசி மயக்கத்துல அது மாதிரி படுத்துக் கெடந்தேன். அந்த மயக்கம் கொஞ்சம் போல தெளிஞ்சப்ப மணி ஆறாயிருந்துச்சு. இன்னொரு அரை மணிநேரம் காத்திருந்தா ஹைதராபாத் ஹவுசுக்கே போய் பார்சல் வாங்கலாம். ஆனா நடந்து போற அளவுக்குத் தாங்காதுங்கறதால வீட்டிலயே சோறாக்கலாம்னு முடிவு பண்ணி குக்கர்ல அரிசியை அளந்து கொட்டி ஒலைய வச்சேன். பதினாறு நிமிஷத்துல சோறு பூ மாதிரி வெந்து ரெடியாயிருச்சு. ஊத்திக்க தயிரு தான் இருந்துச்சு வீட்டுல. எனக்கு சுடு சோத்துல தயிரு ஊத்தி சாப்பிட்டுப் பழக்கமில்லையா அதுனால இன்னோரு அரை மணி நேரத்தத் தண்ணியக் குடிச்சுக்கிட்டே கடத்திட்டேன்.
ஒரு ஏழகால் மணிக்குப் பக்கமா, தட்டுல ரெண்டு கரண்டி சோத்த அள்ளிப் போட்டுத் அது மேல தயிர ஊத்தி, தொட்டுக்க கொஞ்சம் ஊறுகாய சைட்ல வச்சிக்கிட்டு டிவி முன்னாடி வந்து ஒக்காந்தேன். சோத்தப் பெசைஞ்சு ஒரு வாய் சாப்பிடல, காலிங் பெல் அடிச்சிருச்சு. மொதோ மாடில இருக்க என்னை வழக்கமா யாரும் காலிங் பெல்லடிச்சிக் கூப்பிட மாட்டாங்க. ஏன்னா இந்த ஊர்ல வீட்டுக்கு வந்து பாக்கற அளவுக்கு எனக்குத் தெரிஞ்சு யாரும் இல்லிங்க. என் வீட்டுல காலிங் பெல் எப்போ அடிச்சாலும் அது ஹவுஸ் ஓனரக் கூப்பிடத்தான் இருக்கும். தப்பா என் வீட்டு பெல்ல அடிச்சிருப்பாங்க. அப்படி நெனச்சுத் தான் கதவத் தொறந்தேன்.
கதவத்தெறந்தா, அங்க திருமதி ரெட்டி இருந்தாங்க, கையில சாப்பாட்டோடா. ஒன்னும் சொல்லாம என் கையில குடுத்துட்டுப் போயிட்டாங்க. ஆனா பாருங்க போறதுக்கு முன்னாடி கடன்காரனப் பாக்குற மாதிரி கேவலமா ஒரு பார்வை பாத்துட்டுப் போனாங்க. எதுக்காக அப்படிப் பாத்தாங்கன்னு யோசிச்சுக்கிட்டே நானும் டிவி முன்னாடி வந்து உக்காந்தேன். அப்பத்தான் கதவத் தெறக்கறதுக்கு முன்னாடி சோறு பெசைஞ்ச கையக் கழுவாமலே போய் நின்னது புத்திக்கு ஒரச்சுது.
பின் குறிப்பு: சோறு குடுத்துவுடுறேன்னு சொன்னவங்க மதியத்துக்கா ராத்திரிக்கான்னு சரியாச் சொல்லல. அதாகப்பட்டது இதுல என் தப்பு எதுவும் இல்லைன்னு சொல்றேன். இதை ஏன் சொல்றேன்னா “நமக்கு வரலாறு முக்கியம்”. பிற்காலத்துல அதுல எந்தத் தப்பும் நடந்துறக் கூடாது. இன்னொரு முக்கியமான விஷயம், அவங்க கொண்டு வந்து குடுத்த வெஜிடபிள் பிரியாணியும், சிக்கன் வருவலும் ரொம்ப நல்லா இருந்துச்சு.
புகைப்படம்: http://www.arusuvai.com
கொலை வெறிக் கவிதைகள் 1754 – 3
8:18 பிப இல் ஜூலை 6, 2008 | நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: இடி, உரசல், ஜி.ஹெச்., தடவல், பிஞ்ச செருப்பு
உரசிப் பார்த்தான்
பற்றவில்லை…
தடவிப் பார்த்தான்
வேலைக்காகலை…
இடித்துப் பார்த்தான்
எதிர்வினை இல்லை…
அவன்
ஜி.ஹெச்சில் கண்விழிக்குமுன்
கடைசியாப் பார்த்தது….
பிஞ்ச செருப்பு……
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.