இதனால் சகலமானவர்களுக்கும்…
4:27 பிப இல் பிப்ரவரி 6, 2011 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுகஇதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், இந்தத் தளத்தை எழுதி வந்த கருங்காலி, ப்ளாகருக்குப் போய் விட்டதால், புதிய பதிவுகளைப் படிக்க http://vijaygopalswamihyd.blogspot.com என்ற முகவரிக்கு வந்து சேரவும் சாமீஈஈஈஈஈஈயோய்….
சொல்றா மணியா (முன்னாள் மாதவா) – 18/07/2009
12:04 முப இல் ஜூலை 19, 2009 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: ஆடி மாசம், கருவிப்பட்டை, காங்கிரஸ், குலாம் நபி, சூப்பர் சிங்கர், சோதனை முயற்சி, தமிழீஷ், தமிழ்மணம், மிரட்டல் வசூல், விநாயக சதுர்த்தி
தானே உக்காந்த தானைத் தலைவர் குலாம் நபி ஆசாத்… வாழ்க…
சமீபத்துல காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் ஒரு கூட்டத்துல பேசுனாருங்க. மக்கள் தொகை குறித்த அக்கறையோட யாரும் யோசிக்காத கோணத்துல போச்சுங்க அவரோட பேச்சு. கிராமப்புறங்கள்ள கரண்ட் வசதி இல்லாத காரணத்தால பொழுது சாஞ்ச ஒடனேயுமே அல்லாரும் மக்கள் தொகையைக் கூட்டக் கெளம்பிற்றாங்களாம். கரண்ட் வசதி இருந்தா ஜனங்க டிவிய பாத்துக்கிட்டு ஏதாவது ஒரு சேனலுக்கு டி.ஆர்.பி. ரேட்டிங்க ஏத்திவிடுவாங்க, அதனால கிராமப்புறங்கள்ள கரண்ட் வசதி கொண்டு வர எங்க அரசாங்கம் வேண்டியதை எல்லாம் செய்யும்னு சொல்லிருக்காருங்க அந்தக் கூட்டத்துல. ஆக அம்பது வருஷமா இவுரு கட்சி ஆட்சியில இருந்தும் எல்லா கிராமத்துக்கும் கரண்ட் வசதி குடுக்க முடியலைங்கறத இவரே ஒத்துக்கிட்டாருங்க. ரொம்பப் பெரிய மனசு. தானே ஒக்காந்தாருன்னு சொன்னேன், எங்கேன்னு சொன்னேனா? எத்தனையோ பேரு காங்கிரசுக்கு ஆப்பு வைக்கோனும்னு காத்திருக்கும்போது, தனக்கான ஆப்பத் தானே தரையில குத்தி வச்சிட்டு தானே போய் உக்காந்தாரு பாருங்க, அங்க நிக்கிறாரு… மன்னிச்சுக்குங்க உக்காறாருங்க நம்ம குலாம் நபி… பட்டைய கெளப்புங்க.
செல்லக் குரலுக்கான இம்சைத் தேடல்
மனைவியுடன் தொலைபேசிக் கொண்டிருந்த போது விஜய் டிவி வைங்க… விஜய் டிவி வைங்க… என்று அவசரப் படுத்தினாள். விஜய் டிவிக்கு மாற்றினால் அங்கே செல்லக் குரலுக்கான தேடல் நிகழ்ச்சி. சரியாகப் பேசக் கூடத் தெரியாத ஒரு குழந்தையை அதன் தாயார் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்திருந்தார். நடுவர் ஷாலினி குழந்தையின் பெயரை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாகச் சொன்னதும் குழந்தைக்கு ஒரே அழுகை. தாயார், உண்டா இல்லையா என்று தெரிந்தால் நாங்கள் காத்திருக்கத் தேவையில்லை. இன்னுமொரு வாய்ப்புக் கொடுங்கள் என்றார். குழந்தை மீண்டும் பாடியது. அப்போதே நிராகரிக்கப்பட்டது. நிகழ்ச்சி நடத்துவோர் மீதான கோபத்தை விட இது போன்ற பெற்றோர்கள் மீதுதான் எனக்கு கோபம் அதிகம். தங்கள் குழந்தையின் நிலை நகைப்புக்கு இடமாகும் என்று தெரிந்தே அழைத்துவருகிற இவர்களை என்னவென்று சொல்வது?
அய்யய்யோ ஆடி மாசம்…
இவன் ஏண்டா ஆடி மாசத்துக்கு அலறுறான்னு யாரும் தப்பா நெனைக்க வேண்டாம். ஆடி மாசமானாலே அந்தக் காளிக்கு, இந்தக் காளிக்கு, தக்காளிக்கு, வக்காளிக்குன்னு கூழுத்த வசூலுக்குக் கெளம்பிருவானுங்க செல பேரு. பெரு நகரங்கள்ளயும் இந்த அடாவடிக்கு பஞ்சமில்ல. பெருநகரங்கள்ள ஆடி மாசத்த விட விநாயக சதுர்த்திக்குத்தான் இந்த அடாவடி அதிகம். வாடகை வீட்டில இருக்கவுங்களுக்கு ஒரு ரேட், சொந்த வீட்டுல இருக்கவுங்களுக்கு ஒரு ரேட்டுன்னு ரக ரகமா வசூல் நடக்கும். இங்க ஹைதராபாதிலையும் அப்படித்தான். கடந்த விநாயக சதுர்த்தியின் போது அறிய நேர்ந்த தகவல் சொந்த வீட்டுக்காரர்கள் ஐந்தாயிரமும் வாடகை வீட்டுக்காரர்கள் ஐந்நூறும் தந்தே ஆக வேண்டுமாம். இப்படி வசூலித்து என்னதான் செய்கிறார்கள் என்று பார்த்தால், தேவையற்ற அலங்காரங்களும், வீண் விரயங்களுமே காணக் கிடைக்கின்றன. ஒரே சந்தில் மூண்று விநாயகன் சிலைகள். ஏண்டா இப்படின்னு அங்கிருந்த நண்பனைக் கேட்டால் வசூல் ஜாஸ்தி, வேற என்ன பண்ணுவாங்க என்கிறான். இதைத்தான் எங்க ஊருல “சந்தனம் மிஞ்சுனா உக்காற்ற இடத்துல கூட பூசிக்குவாங்கன்னு” சொல்லுவாங்க. பழமொழிய கொஞ்சம் லைட்ட சொல்லிருக்கேன், ராவா சொன்னா கண்டனப் பதிவு போடறதுக்குன்னே லேப்டாப்ப கைல புடிச்சிக்கிட்டு அலையுற கூட்டம் என்னையும் கிழிச்சுத் தொங்க விட்டுடும். இவுங்களுக்கெல்லாம் பீய பீன்னு சொல்லக் கூடாதாம், மலம்னு சொல்லனுமாம். எதிலையும் பொலிட்டிகல் கரெக்ட்னஸ் இருக்கனுமாம். கெரகம்…
என்னமோ போடா மாதவா – 10/07/2009
9:38 பிப இல் ஜூலை 9, 2009 | அங்கதம், அனுபவங்கள், அரசியல், சோதனை, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 9 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: ஆண்மைக் குறைவு, ஓரினச் சேர்க்கை, சானியா மிர்சா, சோதனை முயற்சி, தமிழ்மணம், லாலுபிரசாத்
தமிழ்மணக் கருவிப்பட்டை | ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
லபூப்-ஈ-சகீர்
தமிழக அரசு நிறுவனமான டாம்ப்கால் ஆண்மைக் குறைவுக்கான மருந்து ஒன்றைத் தயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது. அரைக் கிலோ மருந்துக்கு நூற்றைம்பது ரூபாய்க்கும் குறைவாக விலை நிர்ணயம் செய்துள்ளார்கள். சட்டமன்றக் கூட்டத் தொடர் நடப்பதால் அங்கே செய்தி சேகரிக்க வருகிற நிருபர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகளில் லபூப்-ஈ-சாகரும் அடக்கம். யுனானி முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தாம். ஒரு அரசாங்கம் இது மாதிரி மருந்துகளைத் தயாரித்து விற்கலாமா என்றும் கேள்விகளும் எழுந்துள்ளன. அரசாங்கம் சாராயம் விற்பதைவிட மக்கள் ஏமாறாமல் இருப்பதற்காக ஆண்மைக் குறைவு மருந்து விற்பதில் தவறு ஒன்றும் இல்லை. தொன்னூறு வகையான பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்கிற டாம்ப்கால் நிறுவனத்தின் லாபம் இந்த ஒரு பொருளால் இருமடங்காகப் பெருகியிருப்பது குறிப்பிடத் தக்கது. இனிமேலாவது ஒரு மாத மருந்து மூவாயிரம், மூண்று மாத மருந்து பத்தாயிரம் என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கிற மருத்துவர்கள் எல்லாத்தையும் மூடிக் கொண்டு சும்மா இருப்பார்களா பார்ப்போம்.
லாலுவின் பரந்த மனது
ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய லாலு ஒரு மிகப்பெரிய உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். அமைச்சர்கள் யாராலும் சொன்னதைச் செய்ய முடியாது என்பதுதான் அந்த உண்மை. “கடந்த முறை நான் ரயில்வே அமைச்சராக இருந்த போது பாட்னா ரயில் நிலையத்தை முன்மாதிரி ரயில்நிலையமாக மாற்றுவேன் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அமைச்சராக இருந்த ஐந்து ஆண்டுகளில் அதை என்னால் செய்ய முடியவில்லை. ஆகவே அரசு வெளியிடுகிற எந்த அறிவிப்பையும் மக்கள் நம்ப வேண்டிய கட்டாயம் இல்லை” என்று தனது பேச்சின் போது குறிப்பிட்டுள்ளார். இந்த உண்மையை மக்களுக்குக் கூறிய காரணத்துக்காகவே லாலுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
சானியா நிச்சயதார்த்த வைபோகமே
எனக்காகப் பிறந்த சானியா இன்னொருவரை மணப்பதை என்னால் அனுமதிக்க முடியாது என்று சானியாவின் வீட்டுக்குள் புகுந்த பெங்களூர் இளைஞர் சமீபத்தில்தான் கைது செய்யப்பட்டார். இந்த லிஸ்ட்டில் இன்னொரு இளைஞரும் உண்டு, ஆனால் அவரைக் குறித்த தகவல்கள் தெரியவில்லை. இதனிடையே இன்று சானியாவின் திருமண நிச்சயம் ஹைதராபாத் “தாஜ் கிருஷ்னா” ஹோட்டலில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சானியாவின் உடை நிறமென்ன, முக்கியஸ்தர்கள் யார் யார் இந்த விழாவுக்கு வருகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. காரணம் அழைப்பு உள்ளவர்கள் மட்டுமே ஹோட்டலுக்குள் நுழைய முடியும். பத்திரிகையாளர்களுக்குக் கூட அனுமதி இல்லையாம். மிகுந்த சிரமத்துக்குப் பிறகு “சானியா இவ்விழாவில் பச்சை நிற ஷரோரா அணிந்து வருவார்” என்று சாக்ஷி டிவியின் பெண் நிருபர் ப்ளாட்பாரத்தில் நின்றபடியே தொலைகாட்சியில் லைவாகப் சொல்லிக் கொண்டிருந்தார். நூற்றைம்பது உணவு வகைகள் பறிமாறப்பட உள்ளன. இவற்றுள் பிரியாணி மட்டும் பதினைந்து வகை. மாப்பிள்ளை ஹைதராபாதின் பிரபல ஹோட்டல் நிறுவன முதலாளியின் மகனாம்.
ஓரினச் சேர்க்கை
ஓரினச் சேர்க்கையைத் தண்டனைக்குறிய குற்றம் என்று கூறுகிற சட்டப்பிரிவை நீக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கிடையே குஜராத் அமைச்சர் ஒருவர் இந்தியா முழுவது ஓரினச் சேர்க்கை அங்கீகரிக்கப்பட்டாலும் குஜராத்தில் அதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார். புரியாமல் பேசியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. ஓரினச் சேர்க்கை சரியா தவறா என்பதல்ல இப்போதைய விவாதம். அது தண்டனைக்குரிய குற்றமா இல்லையா என்பது மட்டுமே அலசப்பட்டு வருகிறது. அதற்குள் கலாச்சாரக் குண்டர்களுக்கும் ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்களுக்கும் முட்டல் ஆரம்பித்துவிட்டது. ஒரு முடிவு தெரியும் வரை நமக்குப் பொழுதுபோக்கிற்குப் பஞ்சமிருக்காது. ஸ்டார்ட் ம்யூஜிக்… டிஞ்சக்கு டிஞ்சக்கு டிஞ்சக்கு டிங் டிங்…
சோதனை முயற்சி
ஒரு சோதனை முயற்சியாக இந்தப் பதிவுடன் தமிழ்மணத்துக்கான கருவிப்பட்டை ஒன்றைத் தயாரித்து இணைத்திருக்கிறேன். இங்கே தமிழ்மணத்தின் முத்திரையுடன் தமிழ்மணம் வழங்கும் பதிவு சார்ந்த பிற சேவைகளுக்கான சுட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றுள் மென்நூல், வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் பதிவுகள் ஆகியவற்றுக்கு உங்கள் வலைப்பதிவு முகவரியே போதும். பதிவைத் தமிழ்மணத்தில் இணைக்க உங்கள் இடுகையின் முகவரியை ஹைப்பர்லிங்க் ஆகக் கொடுக்க வேண்டும். ஆதரவு மற்றும் எதிர் வாக்குகளுக்கு பதிவைத் தமிழ்மணத்தில் இணைத்த பிறகு அங்கே வழங்கப்படும் போஸ்ட் ஐடி எண்ணை அதற்குரிய இடத்தில் வழங்கவேண்டும். இருந்தும் ஒரே ஒரு குறை, உங்களுக்கு எத்தனை வாக்குகள் விழுந்தது என்பதை இந்தக் கருவிப்பட்டையைக் கொண்டு தெரிந்துகொள்ள முடியாது. உங்கள் இடுகைகள் சூடான இடுகையானால் தமிழ்மண முகப்பில் பார்த்துத் தெரிந்து கொள்ள இயலும்.
தமிழ்மணக் கருவிப்பட்டை | ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
ஊடகப் பொறுப்பின்மை
4:02 முப இல் ஜூன் 17, 2009 | அனுபவங்கள், பகுக்கப்படாதது, படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 12 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: ஊடகம், குற்றம் நிகழ்ச்சி, பொறுப்பின்மை, விஜய் டிவி
விஜய் டிவியின் “குற்றம் – நடந்தது என்ன?” நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்க முடியாவிட்டாலும் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் முழுமையாகப் பார்ப்பதுண்டு. சமீபத்தில் குழந்தைகள் கடத்தி விற்கப்படுவது குறித்த செய்தித் தொகுப்பு ஒன்று அந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. திருச்சியைச் சேர்ந்த கண்ணன்-சுசீலா தம்பதியரின் குழந்தையை தனமணி என்பவர் கடத்திச் செல்ல முற்பட்டும் அது தொடர்பிலான விசாரனையில், இது பெரிய அளவிலான குழந்தை வணிகமாக இயங்கி வருவதும் தெரியவந்தது. இதே செய்தி ஜூன்-14 தேதியிட்ட ஜூனியர் விகடன் செய்தி ஏட்டிலும் வெளிவந்திருந்தது.
இதில் தனமணி சந்தேகத்துக்கு இடமின்றி குற்றவாளிதான் என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. தனமணியின் குற்றத்தை நியாயப்படுத்தும் நோக்கிலும் இப்பதிவு எழுதப்படவில்லை. தொடர்ந்து விஷயத்துக்குள் செல்வதற்கு முன் இதனைத் தெளிவுபடுத்துவது எனது கடமையாகிறது.
ஒருவர் குற்றவாளி என்பதாலேயே அவர் மீது எத்தகைய அவதூறை வேண்டுமானாலும் சொல்லிவிட முடியாது, சொல்லவும் கூடாது. ஆனால் தனமணி விஷயத்தில் விஜய் டிவி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது என்றுதான் எண்ண வேண்டியுள்ளது. திருச்சி லால்குடி அருகிலுள்ள பெருவளநல்லூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மனைவிதான் தனமணி. ராமச்சந்திரனின் மறைவுக்குப் பின் பிழைப்புத் தேடி தனமணி கோவைக்குச் சென்றுவிட்டார். அங்கே அபிராமன் என்பவரை இரண்டாவது கணவராகத் திருமணம் செய்து கொண்டார். ஜூனியர் விகடனில் இச்செய்தி விரிவாக வந்துள்ளது. இதே செய்தி விஜய் டிவியில் முற்றிலும் வித்தியாசமாக எப்படி வந்தது என்பதையும் பார்ப்போம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனமணியைக் குறித்துச் சொல்லும்போது, “இரண்டு முறை திருமணம் செய்து கொண்டவர் தனமணி” என்று மட்டுமே தனமணியின் மணவாழ்க்கை குறித்துக் கூறப்பட்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சியை மட்டுமே பார்க்கிறவர்கள், தனமணி முதல் கணவன் உயிருடன் இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்தவள், நடத்தை கெட்டவள் என்றுதான் எண்ண நேரும்.
செய்தியின் முக்கியப் பகுதி குழந்தைகள் கடத்தி விற்கப்பட்டதைக் குறித்த அலசல். அதில் தனமணி எத்தனை முறை திருமணம் செய்தவர் என்பது சொல்லத் தேவையில்லாத விஷயம். அப்படிச் சொல்லியே ஆகவேண்டும் என்று நினைத்திருந்தால், உண்மையான அல்லது முழுமையான விபரங்களை மக்களுக்கு அறியத் தந்திருக்க வேண்டும். விஜய் டிவி இந்த குறைந்தபட்ச நியாயத்தை, நாகரிகத்தைக் கூடக் கடைபிடிக்கவில்லை.
சந்தேகத்துக்கு இடமின்றி தனமணி குற்றமிழைத்தவர் என்பதாலேயே விஜய் டிவி அவர் மீது அவதூறு சுமத்தியது எவ்விதத்தில் நியாயம்? என் மனதிலிருக்கிற இந்தக் கேள்வியோடு இப்பதிவை முடிக்க விரும்பினாலும், இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன். நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர் அல்லது தொகுப்பாளர் கோபி ஆகியோருடன் தொடர்பிலிருப்போர் இவ்விஷயத்தை அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றால் அவர்களின் தரப்பையும் அறிய ஏதுவாகும். அவர்களிடமிருந்து பதில்கள் வந்தால் அவை யாதொரு திருத்தமுமின்றித் தனிப்பதிவாக வெளியிடப்படும்.
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க
கொலை வெறிக் கவிதைகள் 1754 – 5
1:18 முப இல் ஜூன் 17, 2009 | அங்கதம், கவிதை, கவிதையைப் போல், பகுக்கப்படாதது, படங்கள் இல் பதிவிடப்பட்டது | 9 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: ஆட்டோகிராப், கவிதை, மகளுக்குப் பெயர்
ஆட்டோகிராஃப்
மூண்றாம் வகுப்பில் அனிதா
நான்காம் வகுப்பில் சுமதி
ஐந்தாம் வகுப்பில் ரோசி
ஆறாம் வகுப்பில் தென்றல்
+1ல் திரிபுரசுந்தரி
கல்லூரியில் மாதங்கி
2003 ஜனவரி முதல் மே வரை வித்யா
மே முதல் நவம்பர்- பாரதி
பிறகு மணோன்மணி
மீண்டும் ஒரு அனிதா
அடுத்ததாய் மலர்விழி
பின்னர் 2007 மே முதல்
திருமணம் வரை அனுஷா!
இதில் யார் பெயரை வைப்பது
என் ஒரே மகளுக்கு!!!
[மகள் பிறந்த செய்தியை நண்பர்கள் அனைவருக்கும் தொலைபேசியில் தெரிவித்துக் கொண்டிருந்தேன். அப்போது நீண்ட நாள் தொடர்பில் இல்லாத ஒரு நண்பன் தனக்கும் மகள் பிறந்த செய்தியைத் தெரிவித்தான். அவனது ஆட்டோகிராஃபை நினைவுபடுத்தி என்ன பெயர் வைத்தாய் என்று கேட்டு கேலி செய்தேன். அதுதான் இக்கவிதைக்கான ஊக்கி. இக்கவிதையை நண்பனின் அனுமதியைப் பெற்றே வெளியிடுகிறேன். நண்பனின் வேண்டுகோளுக்கினங்கி அவனது பெயரை மட்டும் சொல்லவில்லை.]
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.