சைதை தமிழரசி தாக்கப்பட்டார்…..

9:09 பிப இல் மார்ச் 3, 2009 | அரசியல் இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , ,

image பல வருஷம் முன்னாடி பங்காளீன்னு ஒரு படம் வந்துச்சு. அதுல கவுண்டமணி சொல்ற டயலாக்தான் இந்த பதிவோட தலைப்பு.

சத்தியராஜ் ஒரு அசைவ ஹோட்டல்ல லெக் பீசா தின்னுட்டு பில்லு குடுக்க காசில்லாம உக்காந்திருக்கும் போது. “சைதை தமிழரசி தாக்கப்பட்டார்… ஒரு கண்ணீரில்லையா, கம்பலையில்லையா, கடையடைப்பு இல்லையா…. ஹர்தால்” அப்படீன்னு கத்திக்கிட்டே கவுண்டமணி ஓடி வருவாரு.

ரெண்டு பேருமா சேந்து கடைகள எல்லாம் அடிச்சு நொறுக்கி அவுங்களுக்கு வேண்டியத எல்லாம் எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போவாங்க. மறுநாள் சைதை தமிழரசிக்காக நிதி திரட்டுறதுக்காக வீடு வீட போவங்க. அப்படிப் போகும்போது பானுப்பிரியா வீட்டுக்கும் போவாங்க. அவுங்க கிட்டயும் நிதி கேப்பாங்க. ஆனா, பானுப்பிரியா தான் அவுங்க சொன்ன சைதை தமிழரசி.

அந்த மாதிரிதான் ஈராக்குல உள்ள புகுந்து காட்டடி அடிச்சு, கைல அகப்பட்டத எல்லாம் சுருட்டிக்கிட்டிருக்கு அமெரிக்கா. 2012 க்குள்ள அங்க அனுப்புன ராணுவத்த கொஞ்ச கொஞ்சமா திருப்பிக் கூப்பிட்டுக்கப் போறாங்களாம். கொள்ளையடிச்சதெல்லாம் பத்தல போல இருக்கு. கால நீட்டிப்பு…

அடுத்த டார்கெட் கெடைச்சுட்டா இருபத்திநாலு மணிநேரத்துல கூட ஈராக்க காலி பண்ணிட்டு போயிருவானுங்க. அவிங்க ரொம்ப நல்லவனுங்க. இன்னிக்கு பாகிஸ்தான்ல இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரங்கள (வார்த்தை உபயம்: வே. மதிமாறன்) சுட்டுட்டாங்களாம். ஒருவேளை நான் எழுதிக்கிட்டிருக்கற இந்த நிமிஷத்துக்கு முன்னால கூட முடிவெடுத்திருக்கலாம். “பங்காளி, இங்க ஒருத்தன் சிக்கிட்டான்னு” சிக்னல் குடுப்பான். யாருக்கு? “நம்ம பிரிட்டிஷ் மாமனுங்களுக்குத் தான்”.

நாம என்னத்த சொல்றது!!! கவுண்டமணி சொன்னதத்தான். “அட்றா சக்க… அட்றா சக்க… அட்றாஆஆஆஆஆ சக்க”.

உபரி:

நம்ம ஊர் மீனவர்கள் எத்தனையோ பேரு நடுக்கடல்ல செத்தப்போ வராத அதிர்ச்சி இலங்கை ஆட்டக்காரர்கள் தாக்கப்பட்டதும் நம்ம பானா சீனாவுக்கு வந்துருச்சாம். “டேய், ஆதிடா….” “போடா….” கோவாலு வேணாண்டா…. “கபோதின்னு சொல்ல வந்தேன்பா”.

“the government of Srilanka never support any form of violence” நான் சொல்லைங்க, ஸ்ரீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் பொக்கவாய் பொக்கலஹாமா கொல்றாரு… சாரி, சொல்றாரு.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.