அன்புள்ள ராமகோபாலன் அல்லது படுக்கை எண் 9, ம.ந. காப்பகம், கீழ்ப்பாக்கம் அல்லது அடச் சீ வாய மூடு
10:00 முப இல் நவம்பர் 30, 2008 | அரசியல், நகைச்சுவை, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: கருத்து சுதந்திரம், பாரதிராஜா, புதுச்சேரி, ராமகோபாலன், ராமர் பாலம்
புதுச்சேரியில் பாரதிராஜா உள்ளிட்ட இயக்குனர்கள் பிரிவினையை தூண்டும் பேச்சுக்களை பேசி இருப்பதற்கு, இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் அறிக்கை: புதுச்சேரியில், “ஈழத்தமிழர் இன்னல் நீங்க போர் நிறுத்தம் ஒன்றே தீர்வு” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சினிமா இயக்குனர்கள் பாரதிராஜா, செல்வமணி, சேகர் ஆகியோர், பிரிவினையைத் தூண்டும் பேச்சுக்கள் பேசி இருப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
“தமிழகம் பாகுபட்டு விடும், தமிழில் தேசிய கீதம் பாடக்கூடிய நேரம் விரைவில் வரும்’ என்று பேசிய பேச்சு, சவால் விடும் வகையில் அமைந்துள்ளது. ஞானசேகரன், சுதர்சனம் உள்ளிட்ட பிரிவினைவாத எதிர்ப்பு காங்கிரஸ் தலைவர்கள், இயக்குனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி புதுச்சேரி அரசை வற்புறுத்த வேண்டும். இலங்கைத் தமிழர்கள் முப்பது ஆண்டுகளாக போராடி வருகின்றனர் எனக் கூறும் இவர்கள், முப்பது ஆண்டுகள் தமிழகத்தில் சினிமா தானே எடுத்துக் கொண்டிருந்தனர். சினிமாவில் மார்க்கெட் சரிந்து, முகவரி இல்லாமல் போய்விட்ட இவர்கள், புலி ஆதரவு முகமூடி அணிந்து, பிரபாகரனுக்கு வக்காலத்து வாங்கி, அவரை தலைவராக சித்தரிப்பது கேவலத்திலும், கேவலம். தமிழகம் பிரிவினையை ஏற்றுக்கொள்ளாது.கருத்து சுதந்திரம், பேச்சுரிமை என்றெல்லாம் உதாரணம் காட்டி எது வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை நாளை நாட்டிற்கு பெரும் தலைவலியாக அமைந்து விடும்.
அந்த கருத்தரங்கில் பேசப்பட்ட பேச்சுக்களை உளவுத்துறை மத்திய அரசுக்கு தெரிவித்து இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.காஷ்மீர், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம் போன்ற மாநிலங்களில் தனி நாடு கோரிக்கை வைத்து பேசியபோது, நடவடிக்கை எடுக்கத் தவறிய காரணத்தால் இன்று அங்கு பிரிவினைவாதம் பேயாட்டம் ஆடுகிறது. எனவே, மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தமிழர்கள் படும் துயங்களுக்கு குரல் கொடுக்காமல், இந்த சினிமாக்காரர்கள், இலங்கை பிரபாகரனுக்கு துதி பாடுவதற்கு காரணம், இனப்பற்றா, இல்லை பணப்பற்றா?பாரதிராஜா, செல்வமணி, வி.சேகர் போன்ற கடல் கடந்த தேசபக்தர்கள், இலங்கையில் சென்று போராடினால் பொருத்தமாக இருக்கும்.இவ்வாறு ராம.கோபாலன் கூறியுள்ளார்.
நன்றி: தின மல(ம்)ர்
யோவ் ராமகோ, ராமர் பாலத்தை இடிக்கக் கூடாதுன்னு ஏன்யா ஊருக்குள்ள இருந்துக்கிட்டு போராட்டம் பண்றே. போய் கடலுக்குள்ள ராமர் பாலத்துலயே நின்னுகிட்டுப் போராட வேண்டியது தானே.
தலைப்பை இப்போது ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள்.
டிஸ்கி: ராமகோபாலனை மனநலம் பாதிக்கப்பட்டோருடன் ஒப்பிட்டமைக்காக ராமகோபாலன் கோபப் படலாம். அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. மனநலம் பாதிக்கப்பட்டோர் கோபப்பட்டால் என்ன செய்வது என்று யோசித்தபோது முன்கூட்டியே பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வது நல்லது என்று தோன்றியதால் இப்போதே கேட்டு வைக்கிறேன், “பகிரங்க மன்னிப்பு”.
Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.