“ஏன் பிறந்தாய் மகனே…” அல்லது “நான் என்னாத்த சொல்வேனுங்கோ”

2:37 பிப இல் பிப்ரவரி 21, 2009 | அரசியல், படங்கள் இல் பதிவிடப்பட்டது | 2 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , ,

imageஅலுவலகத்தில் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக உணவருந்தும் வாய்ப்பு அடிக்கடி கிடைக்காது. அந்த வாய்ப்பு நேற்று கிடைத்தது. நேற்று இரவு 9:00 மணிக்குப் பக்கமாக நானும் வேறு சில நண்பர்களும் ஒன்றாக உணவருந்தச் சென்றோம்.

உணவுக்கூடத்தில் (கெஃபெட்டீரியா) உள்ள தொலைக்காட்சியில் சென்னை உயர்நீதிமன்றக் கலவரக் காட்சிகள் வந்தன. ஆந்திர நண்பர் ஒருவர் “என்ன நடந்தது சென்னை உயர்நீதிமன்றத்தில்” என்று ஆர்வமாகக் கேட்டார்.

ஏறக்குறைய பதினைஞ்சு நிமிஷம் என்ன நடந்துச்சு, ஏன் நடந்துச்சு, இதுக்கு யாரு காரணம், அவருக்கு எதால அடி விழுந்துச்சு, அதுக்கப்புறம் எங்க போய் ஒளிஞ்சுக்கிட்டாரு, வெளிய வந்து என்ன பேசுனாரு, போலீஸ் ஏன் வந்துச்சு, யாரு தூண்டுதல்ல வந்துச்சு, இதையெல்லாம் வெளக்கி சொன்னேன்.

ஆர்வமா கேட்டவரு கடைசிய ஒரு கேள்வி கேட்டாரு. அதக் கேட்ட ஒடனே எனக்கு முகமே சுண்டிப் போச்சு. “ஹூ இஸ் திஸ் சுப்ரமணியம் சாமி? நீ கடைசி வரைக்கும் அவரு யாருன்னே சொல்லலியே”.

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.