பிள்ளைகளிடம் பாரபட்சம்… காட்டப்படுகிறதா இல்லையா?

10:12 பிப இல் மே 11, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 16 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , ,

ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருக்கிற வீடுகளில், பிள்ளைகளிடம் பாரபட்சம் காட்டப்படுகிறதா இல்லையா? கடந்த இரு வாரங்களாக விஜய் டிவி நீயா நானா? வில் விவாதிக்கப்பட்ட தலைப்பு இது.

இதைக்குறித்து நான் எதுவும் எழுதப்போவதில்லை. பின்னூட்டங்களின் வாயிலாக இப்பதிவைப் படிக்கப் போகிறவர்கள்தான் எழுத வேண்டும். இப்பதிவிற்கு பின்னூட்டம் அளிக்க சகபதிவர்கள் சிலருக்கு அழைப்பும் அனுப்ப உள்ளேன். தற்செயலாக வரக்கூடிய வாசகர்களும் பின்னூட்டமிடலாம்.

உங்கள் குடும்பத்திலோ, நீங்கள் பார்த்த குடும்பங்களிலோ நிகழ்ந்த சம்பவங்களாகக் கூட இருக்கலாம். அவை எத்தகைய பாரபட்சங்கள் அல்லது அந்த பாரபட்சம் உங்களிடம் அல்லது நீங்கள் பார்த்தவர்களிடம் எத்தகைய பாதிப்புகளை உண்டாக்கியது போன்றவற்றையும் எழுதலாம்.

எங்கே கொட்டுவது என்று தெரியாமல் மனதிலேயே வைத்திருப்பவர்களுக்கு இது கூட ஒரு வடிகாலாக அமையலாம். உங்கள் அடையாளத்தை வெளிக்காட்ட விருப்பமில்லையெனில் உங்கள் முகத்தை மறைத்துக்கொண்டு கூட கொட்டிவிட்டுப் போகலாம்.

வாருங்கள். தவறாமல் எழுதுங்கள். இங்கே நீங்கள் இறக்கி வைப்பது உங்கள் மனதை அழுத்துகிற சுமையாகக் கூட இருக்கலாம்.

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.