சைதை தமிழரசி தாக்கப்பட்டார்…..
9:09 பிப இல் மார்ச் 3, 2009 | அரசியல் இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: அமெரிக்கா, இலங்கை, கிரிக்கெட், ப. சிதம்பரம், பொக்கலஹாமா
பல வருஷம் முன்னாடி பங்காளீன்னு ஒரு படம் வந்துச்சு. அதுல கவுண்டமணி சொல்ற டயலாக்தான் இந்த பதிவோட தலைப்பு.
சத்தியராஜ் ஒரு அசைவ ஹோட்டல்ல லெக் பீசா தின்னுட்டு பில்லு குடுக்க காசில்லாம உக்காந்திருக்கும் போது. “சைதை தமிழரசி தாக்கப்பட்டார்… ஒரு கண்ணீரில்லையா, கம்பலையில்லையா, கடையடைப்பு இல்லையா…. ஹர்தால்” அப்படீன்னு கத்திக்கிட்டே கவுண்டமணி ஓடி வருவாரு.
ரெண்டு பேருமா சேந்து கடைகள எல்லாம் அடிச்சு நொறுக்கி அவுங்களுக்கு வேண்டியத எல்லாம் எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போவாங்க. மறுநாள் சைதை தமிழரசிக்காக நிதி திரட்டுறதுக்காக வீடு வீட போவங்க. அப்படிப் போகும்போது பானுப்பிரியா வீட்டுக்கும் போவாங்க. அவுங்க கிட்டயும் நிதி கேப்பாங்க. ஆனா, பானுப்பிரியா தான் அவுங்க சொன்ன சைதை தமிழரசி.
அந்த மாதிரிதான் ஈராக்குல உள்ள புகுந்து காட்டடி அடிச்சு, கைல அகப்பட்டத எல்லாம் சுருட்டிக்கிட்டிருக்கு அமெரிக்கா. 2012 க்குள்ள அங்க அனுப்புன ராணுவத்த கொஞ்ச கொஞ்சமா திருப்பிக் கூப்பிட்டுக்கப் போறாங்களாம். கொள்ளையடிச்சதெல்லாம் பத்தல போல இருக்கு. கால நீட்டிப்பு…
அடுத்த டார்கெட் கெடைச்சுட்டா இருபத்திநாலு மணிநேரத்துல கூட ஈராக்க காலி பண்ணிட்டு போயிருவானுங்க. அவிங்க ரொம்ப நல்லவனுங்க. இன்னிக்கு பாகிஸ்தான்ல இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரங்கள (வார்த்தை உபயம்: வே. மதிமாறன்) சுட்டுட்டாங்களாம். ஒருவேளை நான் எழுதிக்கிட்டிருக்கற இந்த நிமிஷத்துக்கு முன்னால கூட முடிவெடுத்திருக்கலாம். “பங்காளி, இங்க ஒருத்தன் சிக்கிட்டான்னு” சிக்னல் குடுப்பான். யாருக்கு? “நம்ம பிரிட்டிஷ் மாமனுங்களுக்குத் தான்”.
நாம என்னத்த சொல்றது!!! கவுண்டமணி சொன்னதத்தான். “அட்றா சக்க… அட்றா சக்க… அட்றாஆஆஆஆஆ சக்க”.
உபரி:
நம்ம ஊர் மீனவர்கள் எத்தனையோ பேரு நடுக்கடல்ல செத்தப்போ வராத அதிர்ச்சி இலங்கை ஆட்டக்காரர்கள் தாக்கப்பட்டதும் நம்ம பானா சீனாவுக்கு வந்துருச்சாம். “டேய், ஆதிடா….” “போடா….” கோவாலு வேணாண்டா…. “கபோதின்னு சொல்ல வந்தேன்பா”.
“the government of Srilanka never support any form of violence” நான் சொல்லைங்க, ஸ்ரீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் பொக்கவாய் பொக்கலஹாமா கொல்றாரு… சாரி, சொல்றாரு.
பார்த்தேன், சிந்தித்தேன் – II
4:46 பிப இல் செப்ரெம்பர் 14, 2008 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 6 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: தலைமுறை இடைவெளி, ப. சிதம்பரம், பிரசவம், மருத்துவமணை
ஊருக்குத் திரும்பும் போது சென்னையில் கண்ட இரு விளம்பரங்கள் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. இப்போது முதல் விளம்பரத்தைப் பற்றிப் பார்ப்போம். கோயம்பேட்டிலிருந்து வடபழனி செல்லும் வழியில் ஒரு பிரம்மாண்டமான விளம்பரத் தட்டியில் (ப்ளெக்ஸ் போர்டில்) சில செய்தித்தாள் துண்டுகள் (நியூஸ் பேப்பர் கட்டிங்குகள்) இருந்தன. அவை ஐம்பத்தைந்து வயதில் இரட்டைக் குழந்தையைப் பிரசவித்த ஒரு பெண்மணியைப் பற்றிய ஒரு செய்தி. அந்தப் பெண்மணி சிகிச்சை எடுத்துக்கொண்ட மருத்துவமணையைப் பிரபலப் படுத்தத் தான் அந்த செய்தித்தாள் துண்டுகள் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தன.
அந்த மருத்துவமணையின் மீது நான் அவதூறு சுமத்துவதாகத் தவறாகக் கருத வாய்ப்பிருப்பதால் அந்த விளம்பரத்தின் புகைப்படத்தை இந்தப் பதிவில் போடவில்லை.
ஐம்பத்தைந்து வயதில் ஒரு பெண்மணி பிரசவிப்பதையோ, அவ்வாறு பிரசவிக்க வைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ள விஞ்ஞானத்தையோ நான் குறை கூற வரவில்லை. ஆனால் அந்தக் குழந்தையின் இடத்திலிருந்து யோசித்துப் பாருங்கள் நண்பர்களே. இந்த நிகழ்ச்சி சில செய்திகளை சொல்லாமல் சொல்லும்.
குழந்தை பெற்றுக்கொள்வது என்பது ஒரு பொறுப்பை வலிந்து ஏற்றுக்கொள்ளும் செயல். அதனால் தான் முப்பது வயதைக் கடந்தும் பிள்ளைப் பேற்றைத் தள்ளிப் போடுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சூழ்நிலைகள் இவ்வாறிருக்கையில், ஐம்பத்தைந்து வயதான ஒருவர் ஒன்றுக்கு இரண்டாக பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கிறார் என்றால் எவ்வாறு அந்தப் பொறுப்பை சரியாக நிறைவேற்ற முடியும்?
நானறிந்த வரையில் இந்தியர்களின் ஆயுள் நீட்சி இன்னும் எழுபது வயதைக் கூடத் தொடவில்லை. அந்தப் பெண்மணி ஐம்பத்தைந்து வயதானவர். அப்படியென்றால் அவருடைய கணவர் அவரைவிடவும் மூத்தவராகத்தான் இருக்கக்கூடும். அதிகபட்சம் இவர்கள் இன்னொரு பதினைந்து ஆண்டுகள் வாழலாம். அந்தக் குழந்தைகள் தங்களது பதினைந்தாவது வயதுக்குப் பக்கமாக தங்கள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழக்கலாம். வளரிளம் பருவத்தில் இப்படி ஒரு இழப்பைச் சந்தித்தால் அந்தக் குழந்தைகளின் நிலை என்ன?
நண்பர்கள் கேட்கலாம், “இப்போது எழுபதுக்குப் பக்கமாக இருக்கும் இந்தியர்களின் ஆயுள் நீட்சி இன்னும் ஐந்தே வருடங்களில் எண்பதைத் தொடலாமல்லவா?” என்று. இந்தப் பெற்றோர்கள் விஷயத்தில் அப்படி நடந்தாலும் ஒரு பெரிய சிக்கல் காத்திருக்கிறது.
இருபத்தைந்து வயது வித்தியாசம் இருக்கிற பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமே இன்று ஏராளமான தலைமுறை இடைவேளை இருந்துவருகிறது. இவர்கள் விஷயத்தில் அந்த வயது வித்தியாசம் ஐம்பத்தைந்தைத் தொடுகிறதே! அப்படியென்றால் அவர்கள் எத்தனை பெரிய சவால்களைச் சந்திக்க வேண்டும்?
இவற்றை விட்டுத் தள்ளுங்கள். நடைமுறைச் சிக்கல்களுக்கு வருவோம். இந்தப் பிள்ளைகள் பள்ளி செல்லுகிற வயதில், மற்ற பிள்ளைகளைப் போல இயல்பாக இருக்க முடியுமா? நாம் அப்பா என்று அழைக்கிற ஒருவரை, நம்முடைய வகுப்புத் தோழர்கள் தாத்தா என்று அழைக்கிறார்களே என்று அந்தக் குழந்தைகள் நினைக்க மாட்டார்களா?
இந்த செயலை என்னவென்று சொல்லுவது? நான் சம்பாதித்து வாங்கிய வீடு, நான் சம்பாதித்து வாங்கிய தோட்டம், நான் சம்பாதித்து வாங்கிய வாகனம், என்று சொல்வது மாதிரி தான், இவன் அல்லது இவள் என் சொந்த ரத்தம், எனக்குப் பிறந்த மகன் அல்லது மகள் என்று சொல்லிக் கொள்வதும். இவர்களைப் பொறுத்த வரையில் கௌரவத்துக்காக வீட்டு வாசலில் நாலு வாகனத்தை நிறுத்தி வைப்பதும், இரண்டு குழந்தைகளைப் பெற்று விளையாட விடுவதும் ஒன்று தான்.
சரி விடுங்கள், அடுத்த விளம்பரத்துக்கு வருவோம். இந்த விளம்பரத்தை நல்லி சில்க்சிலிருந்து சௌந்திரபாண்டியனார் அங்காடி (அதாங்க நம்ம பாண்டி பஜார்) போகும் வழியில் பனகல் பூங்கா முனையில் பார்க்க நேர்ந்தது. அது ஒரு முப்பது அடி உயர விளம்பரம் (கட்-அவுட்). நமக்குப் நன்கு அறிமுகமான ஒரு காங்கிரஸ் பிரபலத்தின் பிறந்தநாள் விளம்பரமாம் அது. நம்ம சீனாதானா தோளில் கலப்பையுடன் நிற்கின்ற மாதிரி வரைகலையில் (கிராபிக்சில்) மாற்றியிருந்தனர். விளம்பரம் போதாதென்று கீழே ஒரு குத்து வசனம் (பஞ்ச் டயலாக்) வேறு. “அன்னமிட்ட கைகளின், உடுக்கை இழந்த கையே” என்று.
அதனடியில் சில காங்கிரஸ் புள்ளிகளின் பெயர்களும் கட்சிக் கொடியின் மூவர்ணத்தில் எழுதப்பட்டிருந்தது. எனக்குப் புரியாததெல்லாம் அவர்கள் சீனாதானாவைப் பாராட்டுகிறார்களா அல்லது திட்டுகிறார்களா? என்பது தான். ஒருவேளை இது தான் “வஞ்சப் புகழ்ச்சியோ”?
ஏற்கெனவே எனக்கும் காரைக்குடி வாசிகளுக்கும் முன்விரோதம் இருப்பதால் (பாக்குவெட்டி குறித்த பதிவு) இந்தப் படத்தையும் போடவில்லை. தயை கூர்ந்து மன்னிக்கவும்.
எனக்கு மட்டும் ஏன் இப்படி – II
1:41 முப இல் ஜூன் 17, 2008 | நகைச்சுவை, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 10 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: அமெரிக்க அதிபர் தேர, நகைச்சுவை, நிதியமைச்சர், ப. சிதம்பரம், பாக்கு வெட்டி, ஹிலாரி கிளிண்டன்
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒபாமா மற்றும் மெக்கெய்ன் ஆகியோரின் பெயரில் வந்த ஆணுறைகள் விற்பனையில் சக்கைபோடு போடுவதைக் குறித்து சேவியர் அவர்கள் ஒரு பதிவு எழுதியிருந்தார். இந்த தேர்தல் நேர நகைச்சுவையில் அவர் சொல்லாமல் விட்ட ஒரு சுவாரசியமான விஷயமும் உண்டு. அவரும் அதைக் குறித்து ஆர்வமாகக் கேட்டிருந்தார். அதற்காகவே இந்த பதிவு. கடந்த வாரம் தற்செயலாக சி.என்.என். ஐ.பி.என். செய்திகளைப் பார்த்தபோது இந்த சமாச்சாரம் தெரிய வந்தது.
விஷயம் வேறொன்றும் இல்லை. ஹிலாரி கிளிண்டன் வடிவத்தில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்பனையாகின்ற பாக்குவெட்டிகளைக் குறித்த செய்திதான் அது.
ஈகிள்வியூ என்ற அமெரிக்க நிறுவனம் இந்த பாக்குவெட்டியைத் தாயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது. அந்நிறுவனம் இந்தப் பாக்கு வெட்டிக்கு காப்புரிமை கோரியும் விண்ணப்பித்துள்ளது. இந்தப் பாக்கு வெட்டிகளை விளம்பரப்படுத்த தனியாக ஒரு வலைத்தளத்தையும் அந்நிறுவனத்தினர் துவங்கியுள்ளனர்.
ஹிலாரி வடிவத்தில் செய்யப்பட்டுள்ள பாக்கு வெட்டியைப் பற்றி ஜார்ஜ் புஷ், அர்னால்ட், ஜான் மெக்கெய்ன், பாரக் ஒபாமா, பில் கிளிண்டன் உள்ளிட்ட அமெரிக்கப் பிரபலங்களின் கருத்துக்களையும் இந்தத் தளத்தில் பதிவு செய்துள்ளனர் (எல்லாம் தள நிர்வாகிகளின் கற்பனைதான்). வால் பேப்பர்கள் மற்றும் பாடல்களுடன் அமர்க்களப்படுத்துகிறது தளம். தளத்துக்கு செல்ல இங்கே சொடுக்கவும்.
நிற்க. இதை எதற்காக இவன் “எனக்கு மட்டும் ஏன் இப்படி – II” ஆக பதிவு செய்தான் என்ற ஐயம் உங்களுக்கு ஏற்படலாம். முன்பே சொல்லியிருக்கிறேன் ஊரே ஒரு விதமாக சிந்தித்தாலும் என்னுடைய சிந்தனை வேறு விதமாக இருக்கும் என்று. அதை மனதில் வைத்துக்கொண்டு தொடர்ந்து படிக்கவும்.
இந்தப் பாக்குவெட்டியைக் கண்டவுடன் எனக்கு வந்த விவகாரமான சிந்தனையை சொன்னால் காரைக்குடிப் பக்கம் இந்த ஜென்மத்தில் நான் கால்வைக்க முடியாது. எனக்குப் பெண் கொடுக்கும் உறவுமுறையில் அங்கே யாரும் இல்லை என்பதால் துணிந்து சொல்கிறேன். நம் ஊர் பிரபலங்களில் யாரையாவது வைத்து இது போன்ற பாக்குவெட்டியைத் தயாரிக்க வேண்டுமென்றால் யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற கோணத்தில் யோசிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் நேற்றைய காலைச் செய்திகளில் கேட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டைப் பற்றிய ஒரு பிரபலத்தின் பேச்சு நினைவுக்கு வந்தது. அந்த பிரபலம் யார் என்பதை மேலே உள்ள தொடுப்பைச் சொடுக்கி நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.
விவகாரமான சிந்தனை இதோடு முடிந்துவிடவில்லை. இன்னும் இருக்கிறது. வி.சி. ஒன்றைவிடவும் வி.சி. இரண்டினால் எனக்கு பெரிய ஆபத்துகள் ஏற்படலாம். இருந்தாலும் ஹைதராபாதில் இருப்பதாலும் மீண்டும் ஊருக்குச் செல்ல சில மாதங்கள் ஆகும் என்பதாலும் எனது பாதுகாப்புக்கு எந்த வகையிலும் குந்தகம் ஏற்படாது என்றே நம்புகிறேன்.
வி.சி. இரண்டு இதோ உங்கள் பார்வைக்கு: ஹிலாரி அம்மாவாவது பேண்ட் போடுறவங்க. இவரு வேட்டிதானே கட்டுவாரு, அப்புறம் பாக்க எங்க வச்சு ஒடைக்கிறது?
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.