அறிவிப்பு…

2:10 பிப இல் நவம்பர் 25, 2008 | கடிதங்கள், பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 1 பின்னூட்டம்
குறிச்சொற்கள்: ,

முந்தைய பதிவில் இடம்பெற்ற புகைப்படம் எனக்கு மின்னஞ்சலில் வந்தது. முன்பும் சில புகைப்படங்களுடன் என்னுடைய கமெண்ட்டையும் இணைத்துப் பதிவாக வெளியிட்டுள்ளேன். அதே போல இந்தப் புகைப்படத்தையும் எனது கமெண்ட்டுடன் வெளியிட்டிருந்தேன். ஆனால் புகைப்படத்தில் இருந்த குறிப்பிட்ட சாராரின் மனதைப் புண்படுத்தலாமோ என்ற எண்ணம் பதிவை வலையேற்றிய இரவே எனக்குத் தோண்றியது.

மறுநாள் காலையே அப்பதிவை நீக்கிவிடலாம் என்றும் அப்போதே முடிவு செய்தேன். “அப்துல்” என்ற பெயரில் வந்த அனானி கமெண்ட் வராதிருந்தால் அந்தப் பதிவு அப்போதே நீக்கப்பட்டிருக்கும். மிகக் கீழ்த்தரமான வார்த்தைகளுடன் வந்திருந்த அந்தப் பின்னூட்டம், பதிவை நீக்குகிற என்னுடைய முடிவை மாற்றிவிட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து கொண்டு இந்த அனானி பின்னூட்டத்தை அனுப்பியிருக்கிறார் அந்த அன்பர். அன்பரின் ஐபி முகவரியைக் கொண்டு அவரது தொலைபேசி எண்ணையும் கண்டுபிடித்தாகிவிட்டது. இனியொரு முறை அந்த அன்பரிடமிருந்து பின்னூட்டங்கள் வந்தால் அவருடைய தொலைபேசி எண் பதிவு மூலமாக பகிரங்கமாக வெளியிடப்படும். தற்சமயம் அவரது இல்ல முகவரியை கண்டறியும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறேன் என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிற்க. முக்கியமான செய்தி இனிமேல்தான் வர இருக்கிறது. நேற்று நண்பர் ஏ.எம்.ஜமால் அவர்களின் பின்னூட்டத்தைப் படித்த பிறகு, இவருக்காகவாவது அந்தப் பதிவை நீக்க வேண்டும் என்று தோண்றியது (பதிவை நீக்குங்கள் என்று அவர் கோராதபோதும்). பதிவு நீக்கப்பட்டால் அவருடைய பின்னூட்டமும் அதனுடன் அழிந்துவிடும் என்பதால் தனிப்பதிவில் அதனை வெளியிடுகிறேன். “பின்னே எதுக்குடா போட்டோ எடுக்குறீங்க” என்ற அந்தப் பதிவு கடவுச்சொல்லால் காக்கப்படுகிறது. இனி எவரும் அதனைப் படிக்க இயலாது. மோசமான வார்த்தைகளால் குட்டிக் காட்டாமல், சரியான வார்த்தைகளால் சுட்டிக் காட்டிய நண்பர் ஜமால் அவர்களுக்கு மிக்க நன்றி.

அன்புடன்

விஜய்கோபால்சாமி

நண்பர் ஜமால் அவர்களின் பின்னூட்டம்:

நீங்கள் சொல்ல வரும் செய்தியின் முக்கியத்துவம் மறைந்து, புகைப்படத்தை கிண்டல் செய்யும் என்னமே மேலோங்கி நிற்கிறது. உங்கள் மனசாட்சியை கேளுங்கள் – உண்மை புரியும்.சரியோ தவறோ – ஒரு சாராரை புண்படுத்தி என்ன செய்ய போகிறீர்கள்.

நண்பரின் தள முகவரி: http://adiraijamal.blogspot.com/

வணக்கம் மக்களே

4:32 பிப இல் செப்ரெம்பர் 14, 2008 | கடிதங்கள், பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 12 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , ,

ஏறக்குறைய ஒரு மாதமாகக் காணாமல் போனவர்கள் பட்டியலில் இருந்து, இப்போது திரும்பி வந்திருக்கிறேன். இது வரை பிறந்தநாள் மட்டுமே எனக்கே எனக்கானதாக இருந்தது. வரும் ஆண்டு முதல் இன்னொரு நாளையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். எனது திருமண நாள்! ஹி ஹி

என்னுடைய சில கவனக்குறைவுகளால் என் திருமணத்தைக் குறித்து சகபதிவர்கள் பலருக்குத் தெரிவிக்க இயலாமல் போய் விட்டது. மதிமாறன், லதானந்த் அங்கிள், வெயிலான் ஆகியோரிடம் என்னுடைய திருமணத்தைக் குறித்து தொலைபேசியில் தெரிவித்திருந்தேன். ஆனால் அவர்களுக்கு அழைப்பிதழை அனுப்புவதில் நேர்ந்த பிழை காரணமாக யாராலும் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. குறிப்பாக மதிமாறன் அவர்கள் என் திருமண வரவேற்பு நாளன்று மற்ற அலுவல்களை ஒதுக்கி வைத்துவிட்டு வரத் தயாராக இருந்தார். ஆனாலும் அவருக்கு அழைப்பு அனுப்ப மறந்த காரணத்தால் அவராலும் கலந்து கொள்ள இயலவில்லை. இதற்காக எனது வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தம்பி விக்னேஸ்வரன் என்னை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்திருக்கிறார். ஆனாலும் தமிழ்நாட்டுக்குச் சென்ற உடன் எனது செல்பேசி எண்ணை மாற்றிக் கொண்டதால் என்னையும் அறியாமல் அனைவருடைய தொடர்பு எல்லைக்கும் வெளியே இருந்திருக்கிறேன். தொலைபேசியில் தொடர்புகொள்ள நினைத்து பதில் சொல்லி இயந்திரத்தின் தெலுங்கு வாக்கியங்களைக் கேட்டு கடுப்பானோருக்கும் எனது மன்னிப்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என் திருமண அழைப்பிதழ் முழுவதும் தமிழிலேயே அச்சிடப்பட்டிருந்தது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருந்தாலும், அலுவலகத்தில் தமிழ் தெரியாத என்னுடைய மேலாளர், சகபணியாளர்கள் ஆகியோரால் அதனை வாசிக்க இயலாமல் போனது வருத்தத்திற்குரிய விஷயமாகிவிட்டது.

ஆகஸ்ட் இருபத்திஎட்டாம் நாள் குடந்தையில் திருமணம் இனிதே நிகழ்ந்தது. ஏறக்குறைய இதுவும் ஒரு காதல் திருமணம் தான். என்னுடைய (கவனிக்க, எங்களுடைய என்று எழுதவில்லை) காதலை என் குடும்பமும், திருமதியாரின் குடும்பமும், முக்கியமாக திருமதியாரும் ஏற்றுக்கொண்டு நிகழ்ந்த திருமணம் இது. பதினோரு வயது வரை கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து பிறகு தனிக்குடும்பமாக வாழவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானவன் நான். திருமதியாரின் குடும்பம் இன்னும் கூட்டுக் குடும்பமாகவே இருந்து வருகிறது. அவர்களை விரும்பியதற்கான முதல் காரணமும் இது தான்.

திருமண புகைப்படங்களின் மென்-வடிவம் (சாஃப்ட் காப்பி) தயாரான உடன் அதற்கான சுட்டியை பதிவில் போடுகிறேன். பார்த்தருளுக.

பாம்புக்குத் தலை, மீனுக்கு வால்…

9:50 முப இல் ஓகஸ்ட் 1, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 16 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , , ,

இன்று குசேலன் ரிலீஸ்….

(ரஜினிக்குப்) புதிய பஞ்ச் டயலாக்:

நான் சூப்பர் ஸ்டார் இல்லைடா, 100% வியாபாரி…..

இது போன்ற பஞ்ச் டயலாகுகளை நீங்களும் எழுதலாம். விசிலடிச்சான் குஞ்சுகளின் ஜால்ராக்களைத் தவிர மற்றவை பதிப்பிக்கப்படும். பின்னூட்டங்களில் தனி மனிதத் தாக்குதல் இருப்பின், ரஜினியின் வி.குஞ்சுகளுடைய யோக்கியதையை உலகறியச் செய்ய அவை மட்டுறுத்தாமல் பதிப்பிக்கப்படும்.

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.