அன்புள்ள ராமகோபாலன் அல்லது படுக்கை எண் 9, ம.ந. காப்பகம், கீழ்ப்பாக்கம் அல்லது அடச் சீ வாய மூடு

10:00 முப இல் நவம்பர் 30, 2008 | அரசியல், நகைச்சுவை, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , ,

புதுச்சேரியில் பாரதிராஜா உள்ளிட்ட இயக்குனர்கள் பிரிவினையை தூண்டும் பேச்சுக்களை பேசி இருப்பதற்கு, இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் அறிக்கை: புதுச்சேரியில், “ஈழத்தமிழர் இன்னல் நீங்க போர் நிறுத்தம் ஒன்றே தீர்வு” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சினிமா இயக்குனர்கள் பாரதிராஜா, செல்வமணி, சேகர் ஆகியோர், பிரிவினையைத் தூண்டும் பேச்சுக்கள் பேசி இருப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

“தமிழகம் பாகுபட்டு விடும், தமிழில் தேசிய கீதம் பாடக்கூடிய நேரம் விரைவில் வரும்’ என்று பேசிய பேச்சு, சவால் விடும் வகையில் அமைந்துள்ளது. ஞானசேகரன், சுதர்சனம் உள்ளிட்ட பிரிவினைவாத எதிர்ப்பு காங்கிரஸ் தலைவர்கள், இயக்குனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி புதுச்சேரி அரசை வற்புறுத்த வேண்டும். இலங்கைத் தமிழர்கள் முப்பது ஆண்டுகளாக போராடி வருகின்றனர் எனக் கூறும் இவர்கள், முப்பது ஆண்டுகள் தமிழகத்தில் சினிமா தானே எடுத்துக் கொண்டிருந்தனர். சினிமாவில் மார்க்கெட் சரிந்து, முகவரி இல்லாமல் போய்விட்ட இவர்கள், புலி ஆதரவு முகமூடி அணிந்து, பிரபாகரனுக்கு வக்காலத்து வாங்கி, அவரை தலைவராக சித்தரிப்பது கேவலத்திலும், கேவலம். தமிழகம் பிரிவினையை ஏற்றுக்கொள்ளாது.கருத்து சுதந்திரம், பேச்சுரிமை என்றெல்லாம் உதாரணம் காட்டி எது வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை நாளை நாட்டிற்கு பெரும் தலைவலியாக அமைந்து விடும்.

அந்த கருத்தரங்கில் பேசப்பட்ட பேச்சுக்களை உளவுத்துறை மத்திய அரசுக்கு தெரிவித்து இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.காஷ்மீர், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம் போன்ற மாநிலங்களில் தனி நாடு கோரிக்கை வைத்து பேசியபோது, நடவடிக்கை எடுக்கத் தவறிய காரணத்தால் இன்று அங்கு பிரிவினைவாதம் பேயாட்டம் ஆடுகிறது. எனவே, மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தமிழர்கள் படும் துயங்களுக்கு குரல் கொடுக்காமல், இந்த சினிமாக்காரர்கள், இலங்கை பிரபாகரனுக்கு துதி பாடுவதற்கு காரணம், இனப்பற்றா, இல்லை பணப்பற்றா?பாரதிராஜா, செல்வமணி, வி.சேகர் போன்ற கடல் கடந்த தேசபக்தர்கள், இலங்கையில் சென்று போராடினால் பொருத்தமாக இருக்கும்.இவ்வாறு ராம.கோபாலன் கூறியுள்ளார்.

நன்றி: தின மல(ம்)ர்

யோவ் ராமகோ, ராமர் பாலத்தை இடிக்கக் கூடாதுன்னு ஏன்யா ஊருக்குள்ள இருந்துக்கிட்டு போராட்டம் பண்றே. போய் கடலுக்குள்ள ராமர் பாலத்துலயே நின்னுகிட்டுப் போராட வேண்டியது தானே.

தலைப்பை இப்போது ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள்.

டிஸ்கி: ராமகோபாலனை மனநலம் பாதிக்கப்பட்டோருடன் ஒப்பிட்டமைக்காக ராமகோபாலன் கோபப் படலாம். அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. மனநலம் பாதிக்கப்பட்டோர் கோபப்பட்டால் என்ன செய்வது என்று யோசித்தபோது முன்கூட்டியே பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வது நல்லது என்று தோன்றியதால் இப்போதே கேட்டு வைக்கிறேன், “பகிரங்க மன்னிப்பு”.

அபத்தமே உன் பெயர்தான் ராமகோபாலனா?

8:17 பிப இல் மே 5, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 12 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , ,

சென்னை : கமல்ஹாசன் 10 வேடங்களில் நடிக்கும் “தசாவதாரம்’ படத்தில் இடம்பெறும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காமல் படத்தை வெளியிடக் கூடாது என இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராம.கோபாலன் வெளியிட்ட அறிக்கை:

“தசாவதாரம்’ படத்தில் சைவ, வைணவ சமயங்களுக்கிடையே 16-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மோதலை காட்சியாக்கி இருக்கிறார்கள். அப்போது கோவிலில் இருந்த சாமி சிலைகளை சேதப்படுத்துவது போன்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெறுவதாகத் தெரிகிறது.

இந்து மதத்தைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் சித்திரிக்கலாம் என்ற எண்ணத்தோடு இந்தப் படக்குழுவினர் செயல்பட்டுள்ளனர். நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் இதுபோன்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை சினிமாவில் அனுமதிக்கக்கூடாது.

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காத பட்சத்தில் “தசாவதாரம்’ படத்தைத் தமிழகத்தில் திரையிட அனுமதிக்கமாட்டோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி: நெல்லைத் தமிழ் டாட் காம்

தசாவதாரம் திரைப்படத்தில் சைவ வைனவ மோதல் குறித்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூப்பாடு போடுகிறார் ராமகோபாலன். சைவ வைனவ மோதல் என்பது தமிழகத்தின் நிகழ்ந்ததுதானே. குலோத்துங்க சோழன் காலத்தில் சிதம்பரத்தில் இருந்த கோவிந்த ராஜ பெருமாள் சிலை கடலில் போடப்பட்டது வரலாறு.

இதில் எங்கே வரலாற்றுத் திரிபு வந்தது? இதில் எங்கே இந்து மதம் களங்கப்படுத்தப் பட்டது? கதை நிகழ்ந்த காலத்தில் இந்து மதமே கிடையாதே. சைவம், வைனவம், சாக்தம், கௌமாரம், கானபத்தியம், போன்ற இப்போதைய இந்து மதத்தின் உட்பிரிவுகள் ஒவ்வொன்றும் தனித்தனி மதங்களாக விளங்கிய காலம் அல்லவா அது. சொல்லப் போனால் இப்போது ராமகோபாலன் செய்துகொண்டிருப்பதுதானே வரலாற்றுத் திரிபு.

மேலும் சைவ வைனவ மோதல் 16 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்தது என்று கூறுகிறார். அவருடைய வரலாற்று அறியாமையை நினைத்து பரிதாபம்தான் பட முடியும். 16 ஆம் நூற்றாண்டு என்பது இந்தியாவில் மொகலாயர்களின் காலம்.

இதை எல்லாம் பார்க்கும்போது “அபத்தமே உன் பெயர்தான் ராமகோபாலனா?” என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

அட ராமகோபாலா ‘மட’ ராமகோபாலா…

2:37 பிப இல் ஏப்ரல் 10, 2008 | நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 1 பின்னூட்டம்
குறிச்சொற்கள்: , ,

இந்துக்கள் வழிபடுகின்ற தெய்வங்களுக்கு விரோதமாக நடிகர் சத்யராஜ் பேசியதற்கு இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக கர்நாடகத்தில் சில இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களை எதிர்த்து திரைஉலகத்தினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் நடிகர் சத்யராஜ், இந்துக்கள் வழிபடுகின்ற தெய்வங்களுக்கு விரோதமாக பேசிய பேச்சை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

தன்னை நாத்திகன் என்று கூறிக் கொள்ளும் இவர், தமிழ்நாட்டில் முருகன் இருக்கும் போது கேரளத்து ஐயப்பனையும், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் உள்ள தெய்வங்களை ஏன் வழிபட வேண்டும்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

முருகன் புகழ்பாடும் சத்யராஜ் எத்தனை முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தியிருக்கிறார்? முருகன் கடவுள் இருக்கிறார் என்பதை ஒத்துக் கொள்கிறாரா? கி.வீரமணியிடம் முருகன் புகழ்பாடுவாரா?

மற்ற மதங்களை பற்றி பேச தைரியமற்ற கோழை, இந்து மதத்தை மட்டும் இழிவுபடுத்தி பேசுகிறார். நடிகர் சங்கம் இதை கண்டிக்க வேண்டும்.

“தமிழ் உணர்வு’ சத்யராஜ் தமிழ்நாட்டு பெண் நடிகைகளுடன் மட்டும் தான் நடிப்பேன். வேறு மாநில நடிகைகள் வேண்டாம் என்று சொல்வாரா?

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் சீக்கிரம் நிறைவேற அரசை வற்புறுத்துகிறோம். மத மோதலை உருவாக்கும் சத்யராஜை வன்மையாக கண்டிக்கிறோம்.

நன்றி: idlyvadai.blogspot.com

இதப் படிக்கும் போது எனக்கு சிரிப்பு சிரிப்பா வந்திச்சுப்பா. நெஜமாத் தான்! இந்த மாமா என்ன சொல்றாரு பாரேன். சத்தியராஜ் என்ன புதுசாவா இந்து சாமிங்கள திட்டுறாரு. இந்த உண்னாவிரதத்துல அவரு எந்த சாமியையும் திட்டல. அந்த சாமிங்களுக்கு காசு வாங்காம பிரசாரம் தான் பண்ணாரு. ‘ராமகோ’ ஒரு விஷயத்த வசதியா மறந்திட்டாரு. சத்தியராஜ் முருகனப் பத்தி மட்டுந்தான் சொன்னாரா, சுடலைமாடன், முனுசாமி, கருப்பசாமி இப்படி பாமர சனங்க வழிபடற சிறு தெய்வங்களைப் பத்திக் கூட தான் சொன்னாரு. இதுக்கு எதுக்கு ‘ராமகோ’வுக்கு கோவம் பொத்துக்கிட்டு வருது. சாமி கும்பிடக் கூட இனிமே நம்ம ஊரவிட்டு போகாதடா, எனக்கு நம்பிக்கை இல்லாட்டியும் நம்புற நீ நம்ம ஊருல இருக்க சாமிங்கள கும்புடுன்னு சொன்னதில ராமகோ என்ன குத்தத்த கண்டாரோ.

சத்தியராஜ் நமிதா கூட ஆடுனா இவருக்கு என்ன வந்துச்சு? ஒருவேளை தன்னால நமிதா கூட ஆடமுடியலைங்கற ஆத்தாமையா?

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.