ஈழம்…

7:30 பிப இல் ஒக்ரோபர் 18, 2008 | அரசியல் இல் பதிவிடப்பட்டது | 6 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , ,

ஒருவர் இந்தியாவில் எங்கே பிறந்திருந்தாலும் எந்த ஒரு தொகுதியிலும் மக்களின் ஆதரவோடு மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் போக முடியும். அப்படித்தான் திருவாரூரில் பிறந்த மு. கருணாநிதி சைதாப்பேட்டையிலும் தமிழகத்தின் வேறு பல தொகுதிகளிலும் வென்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார் முதல்வரும் ஆனார். கர்நாடகத்தில் பிறந்த ஜெயலலிதா (அவர் தமிழரா இல்லையா என்ற விவாதத்துக்குள் நான் போகவில்லை) தமிழகத்தில் பர்கூர், காங்கேயம், ஆண்டிப்பட்டி போன்ற தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினராகி தமிழகத்தின் முதலமைச்சராகவும் ஆனார். லாகூரில் பிறந்த மணிசங்கர ஐயர் மயிலாடுதுறையின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். அதே லாகூரில் பிறந்த அத்வானி இந்தியாவின் துணைப் பிரதமராக இருந்துள்ளார். இத்தாலியில் பிறந்தபோதும் திருமண உறவின் வழியாக இந்தியாவின் மருமகளான சோனியாகாந்தி உத்திரப்பிரதேசத்தில் ரேபரேலியில் வென்று பிரதமர் பதவி வரை நெருங்கி வந்தார். புதுக்கோட்டையில் பிறந்த திருநாவுக்கரசர் கர்நாட மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

வேறு ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஏன்… வேறு நாட்டைச் சேர்ந்தவர்களாகவே இருந்தாலும் இந்தியாவில் ஊராட்சி உறுப்பினர் பதவியிலிருந்து குடியரசுத் தலைவர் பதவி வரை எவரும் எதற்கும் போட்டியிடலாம், வெல்லலாம். வெற்றிக்கு உத்திரவாதம் இருக்கிறதோ இல்லையோ, சென்னையில் திருவல்லிக்கேணியில் பிறந்த நான் நினைத்தாலும் இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வாய்ப்பு இங்கே இருக்கிறது. உதாரணமாக பட்டுக்கோட்டையில் பிறந்த ஆர்.வி.யும், ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல்கலாமும் இந்நாட்டின் குடியரசுத் தலைவர் பதவியை வகித்தவர்கள்.

ஒருவர் இந்நாட்டிலுள்ள முற்பட்ட சமூகம் ஒன்றிலும், இன்னொருவர் சிறுபாண்மை மதம் ஒன்றிலும் பிறந்தவர்கள். இருவருமே நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பத்து சதத்துக்கும் குறைவான மக்களைக் கொண்ட மாநிலத்திலிருந்து, முதல் குடிமக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்களும், மற்ற மதத்தினரும் கூட இவர்களை தங்கள் முதல் குடிமகனாக ஏற்றுக் கொண்டனர். எந்தப் பாகுபாடும் காட்டப்படவில்லை.

இதை மனதில் வைத்தபடி இலங்கையைப் பற்றி யோசிப்போம். சிங்களர்கள் மட்டுமே நாட்டின் உச்சபட்ச பதவிகளான பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்துள்ளனர். இலங்கையிலேயே பிறந்த ஒரு தமிழன் சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினராக வர முடிந்தாலும் கூட அந்நாட்டின் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் பதவிக்கு வருகிற வாய்ப்பு அறவே கிடையாது. “வேண்டுமானால் பிரபாகரன் வடக்கு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து விட்டுப் போகட்டும்” என்று அந்நாட்டின் குடியரசு முன்னாள் தலைவர் சந்திரிகா கூறினார். தமிழன் எங்கிருந்தாலும் தனக்குக் கீழே இருக்க வேண்டும் என்ற வல்லாதிக்க மனப்பாண்மை இது. நான் பிச்சை போட்டால் தான் உனக்கு சாப்பாடு என்று சொல்லுகிற பாசிசம்.

ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தில் வரும் மாதவன் போன்ற தமிழர்கள் இருந்தாலும், அதே படத்தில் வரும் பிரகாஷ்ராஜைப் போல ஒரு சிங்களன் கூட இருக்க மாட்டன் என்று தான் சொல்ல வேண்டும். ஒருவேளை தமிழர்கள் மீதான காழ்ப்பை ஒவ்வொரு சிங்களக் குழந்தைக்கும் தாய்ப்பாலோடு கலந்து ஊட்டுகிறார்களோ?

தனி ஈழம் என்ற வாதத்தை எவர் முன்னெடுத்தாலும், தமிழர் சுயநிர்ணயம் என்ற எதிர்வாதமும் கூடவே கிளம்பிவிடுகிறது. சரி, சுயநிர்ணயத்தால் இலங்கைத் தமிழர்கள் அடையப் போகிற அதிகபட்ச அதிகாரம் என்ன? தமிழர் வசிக்கும் பகுதியில் தமிழர்களே மக்கள் பிரதிநிதி ஆவது, அதிகபட்சம் வடக்கு மாநிலத்தின் முதலமைச்சர் பதவி. சுயநிர்ணயம் இலங்கையில் உள்ள தமிழனுக்கு இந்தியாவில் உள்ள தமிழனுக்கு இருப்பதைப் போன்ற நாட்டின் முதல் குடிமகனாவதற்கான சமவாய்ப்பைக் கொடுக்குமா? அப்புறம் என்னடா சுயநிர்ணயம்… __ __ ருக்கு உதவாத சுயநிர்ணயம்…

இங்க நான் தண்ணி ஊத்தி லைட்டா சொன்னத அங்க ஒருத்தர் ராவா சொல்லிருக்கறாரு. போய் படிச்சுப் பாருங்க.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.