என்னமோ போடா மாதவா – 16/05/2009

2:45 முப இல் மே 16, 2009 | அங்கதம், படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

image

சொல்லுங்க எசமான், நான் செல்போன் திருடனா?

கடந்த வாரம் வேலையில் மும்முரமாக மூழ்கியிருந்த நேரத்தில் நண்பன் ஒருவனுக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்த பெண்மணி தெலுங்கில் பேசியதால் நண்பண் என்னிடம் தொலைபேசியைக் கொடுத்துப் பேசச் சொன்னான். உரையாடல் மொத்தமும் தெலுங்கில், உங்கள் வசதிக்காக தமிழில் பெயர்த்திருக்கிறேன். எதிர்முணை அம்மணி “புருஷோத்தமன் இருக்காரா” என்றார். “இல்லைம்மா, என் பேரு குமார்” என்றேன் (நண்பனின் தொலைபேசி என்பதால் அவன் பேசுவது போலவே பேசினேன்). “பொய் சொல்லாதீங்க, நீங்க புருஷோத்தமன் தானே!” என்று மறுபடியும் கேட்டாள் எ.மு. அம்மணி. கொஞ்சம் சுதாரித்து, “உனக்கு என்ன நம்பர்மா வேணும்” என்றேன். அப்போதும் “இந்த நம்பர் தான், நான் சரியாத்தான் போட்டேன்” என்றார். “இல்லையம்மா, நான் புருஷோத்தம் கெடையாது போன வை” என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தேன்.

இரண்டே நிமிடத்தில் அதே எண்ணிலிருந்து மீண்டும் அழைப்பு. குமார் இம்முறையும் என்னிடமே கொடுத்தான். பொத்தானை அழுத்திக் காதில் வைத்தால் “புருஷோத்தமன் சார், வெளையாடுறீங்க தானே” என்று அதே அம்மணி. “இல்லையம்மா, நீ தப்பான நம்பர் போட்டு பேசிக்கிட்டிருக்கே, போன வை” என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தேன். போனைக் குமாரிடம் கொடுக்குமுன்பே மறுபடியும் அதே எண்ணிலிருந்து இன்னொரு அழைப்பு. “நம்பர் புருஷோத்தமனோடது தான், ஆனா அவரு போன நீங்க ஏன் வைச்சிருக்கீங்க” என்று போட்டாளே ஒரு போடு, உஷ்ணம் தலைகேறி “நோரு முயி (வாய மூடு). நேனு புருஷோத்தமன் காது, காது, காது…. ரெண்டு சாரி செப்பேனுகா… கட் ச்செய்…” என்று நான் கத்திய கத்தலில் சுற்றியிருந்த பத்துப் பதினைந்து பேரும் தங்கள் அலுவல் மறந்து சிரித்தனர். அதிலொருவர், “நம்பரக் குடு நயனா, வீட்ல தனியாதான் இருக்கேன்” என்றதும் மீண்டும் ஒருமுறை வெடிச் சிரிப்பு.

அவளாவது என்னை “செல்” திருடனாக்கினாள், இன்னொருவர் என்னை தரகனாகவே ஆக்க நினைத்துவிட்டார். சொல்லுங்க எசமான், நான் “செல் திருடனா”?

எஸ்.எம்.எஸ்.

நண்பர்களே, இது அந்தப் படத்தைக் குறித்த விஷயமல்ல. ஆந்திரத் தேர்தல் முடியும் வரை நான் அனுபவித்த கொடுமை. ஒவ்வொரு நாளும் ஆந்திராவின் முக்கியத் தலைவர்களிடமிருந்து என் தொலைபேசிக்கு ஓட்டுக் கேட்டுக் குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருந்தது (என்னைப் போல நெறைய பேருக்கு அனுப்புனாங்கன்னு தனியா வேற சொல்லனுமா…). “வேலையிழந்த இளைஞர்களே, (அடப் பாவி, என்ன இன்னும் வேலைய உட்டுத் தூக்கலடா) உங்கள் வேலைக்கு உத்திரவாதம் தரும் ஆட்சியை அமைக்க எனக்கு வாக்களியுங்கள் – உங்கள் சந்திரபாபு”, “வளாமான ஆந்திராவை உருவாக்க காங்கிரஸ் இயக்கத்துக்கு வாக்களியுங்கள் – உங்கள் ஒய்.எஸ்.ஆர்.”, “நான் விபத்திலிருந்து குணமாகி வர உங்கள் அனைவருடைய அன்பும் பிரார்த்தனைகளுமே காரணம். மிக்க நன்றி. – உங்கள் ஜூனியர் என்.டி.ஆர்”, தேர்தல் முடியும் வரை இவ்வாறாக நாளொன்றுக்கு நான்கைந்து குறுஞ்செய்திகள் வந்த வன்னமிருந்தன. இன்னைக்கு முடிவுகள் வெளியான பிறகு ஜெயிச்ச கட்சிக்காரனுங்க நன்றி சொல்லி வேற சாகடிப்பானுங்களே (சொல்லுவானுங்க?), நான் என்னாத்த செய்வேன்…. தமிழ்நாட்டு சொந்தங்களே, உங்களுக்கு இது மாதிரி எதுவும் வரலியா? ஈரோட்டுத் தாத்தா அப்பவே சொன்னாரு “ஓட்டுன்னா எத வேணாலும் தருவான். பொண்டாட்டியத் தவிற” அப்படீன்னு. எனக்கென்ன வருத்தம்னா அவரு சொன்னத இவனுங்க பொய்யாக்கிருவானுங்களோன்னு தான். அட, திருந்திட்டாப் பரவாயில்லீங்க, பொண்டாட்டியையும் குடுத்துட்டானுங்கன்னா?.

இதுவும் ரிசல்ட்டு மேட்டர்தான்

அரசியல்வாதிகளைப் போலவே ரிசல்ட்டுக்குக் காத்திருந்த இன்னொரு கூட்டம் மாணவர் கூட்டம். இவுங்க பதட்டம் ரெண்டு நாளைக்கு முன்னயே தணிஞ்சிருச்சு. முதலிடத்தில் மூன்று மாணவர்கள், ஒரு மாணவி. கேட்கவே மகிழ்ச்சியாயிருக்கிறது. தெனமும் ஒரு கிழம் (இதுக்கு மரியாத வேறயா) ராஜ் டிவில “சுய இன்பத்தால வீணாப் போகாதீங்கடா. தமிழ்நாட்ல ஒரு மாணவன் கூட ஏன் மொதலிடம் வரமுடியல? எல்லாரும் கைப்பழக்கத்தால வீணாப் போறானுங்க” என்று தினந்தோறும் ஒப்பாரி வைக்கும். என்னமோ தமிழ்நாட்டுல அத்தன பயலும் இருபத்திநாலு மணி நேரமும் கைல புடிச்சிக்கிட்டு அலையிற மாதிரி ஒரு பில்டப் குடுத்துக்கிட்டிருந்துச்சு. ஒருத்தனுக்கு மூணு பேரு மொதலிடத்துக்கு வந்திருக்காங்க. சேலம் வரைக்கும் போய் அது மூஞ்சில யாராவது கரியப் பூசிட்டு வாங்களேன்.

என்ன கூத்துடா இது?

இந்த ஜோசியக் காரணுங்க முன்னையெல்லாம் விதவிதமா தோஷத்துக்குப் பரிகாரம் சொல்லுவானுங்க. இப்போ இவனுங்களும் ரொம்ப ஹைடெக்கா மாறிக்கிட்டிருக்கானுங்க. முந்தாநாள் ராத்திரி ரெண்டு மணிக்கு விஜய் டிவியில ஒருத்தன் பரிகாரம் சொல்லிக்கிட்டிருந்தான் “ஆள் காட்டி வெரல்ல மச்சமிருக்கவனுக்கெலாம் அல்ப ஆயுசாம். அதுக்காகத் திருவண்ணாமலை கோயில்ல இருக்க சித்திரகுப்தன் செலைக்கு முன்னால ரெண்டு நோட்டும் ரெண்டு பேணாவும் வாங்கி வைங்கடாங்கறான். விட்டா ஒரு லேப்டாப்ப வாங்கி எனக்கு அனுப்பி வைங்கடான்னு சொன்னாலும் சொல்லுவானுங்க. ஆறு ஏழு மாசத்துக்கு முன்னால என் நண்பன் ஒருத்தன் ஏதோ ஒரு நாடி ஜோதிட வெப்சைட்டப் பாத்துட்டு கைய ஸ்கேனர்ல வச்சு படத்த அந்த நாடிஜோதிட கம்பெனிக்கு அனுப்பி வைச்சான். ரெண்டு நாள் கழிச்சு ஒரு ரிப்ளை வந்திருந்துச்சு “தங்களது நாடியை ஆராய்ந்து பார்த்ததில், நீங்கள் கோதானம் கொடுத்தால் தங்களது தோஷங்கள் விலகி இன்னல்கள் தீரும் என்று தெரிய வந்துள்ளது. மாட்டின் விலையான பன்னிரண்டாயிரத்தை டிடி எடுத்து அனுப்பினால் உங்கள் சார்பில் நாங்களே கோதானம் கொடுத்துவிடுவோம். மாட்டைப் பெற்றுக்கொள்ள நாங்களே ஆட்களை ஏற்பாடு செய்துகொள்வோம்” என்று ரிப்ளையில் கண்டிருந்தது. படித்துப் பார்த்த நண்பன் சத்தமாக “ஓ” போட்டான்… (__த்தா) அடைப்புக் குறிக்குள் கோடிட்ட இடத்தில்.

தமிழ்மண ஆதரவு வாக்கு | தமிழ்மண எதிர்வாக்கு

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.